வியாழன், 1 ஆகஸ்ட், 2019

எங்கே சென்றாய் நீ?

எங்கே சென்றாய் நீ?
==========================================ருத்ரா

குற்றால அருவியில்
குளிக்கையிலே தேடினேன்.
அப்புறமும்
மரக்கிளைகளில் தாவும்
குரங்குகள் போல்
மனத்தை ஊஞ்சல் ஆடவிட்டேன்.
அப்புறமும்
பாபநாசத்து படிக்கட்டுகளில்
கால்கள் அளைய விட்டேன்.
அப்பப்ப!
அந்த பருமீன்கள் ஒவ்வொன்றும்
உன் கூரிய ஆனால் இனிய‌
பார்வைகளால்
என்னை வெல வெலக்க‌
செய்து விட்டனவே.
உன் கண்விழி நெளியலில்
மின்னல் போல்
சில கணங்களை குருடாக்கிய‌
அதே பார்வைகளின்
இடைவெளியில்
எங்கோ தப்பித்து
மறைந்து கொண்டாய்.
எங்கே சென்றாய் நீ?

====================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக