திங்கள், 5 ஆகஸ்ட், 2019

சவ்வுப்படலம்

சவ்வுப்படலம்
========================================ருத்ரா


இரண்டு முற்றுப்புள்ளிகளுக்கு இடையில்
ஒரு வாக்கியப்பிரதேசம்.
கருத்து பிரசவிக்கவே இல்லை.
குவா குவா சத்தங்கள் மட்டும்
அமர்க்களம்.
நான் சொல்லவருவது என்னவென்றால்
என்று
கீரியும் பாம்பும் விளையாட்டு காட்டும்
பாய்ச்சல்களே அதிகம்.
தெளிவான சிந்தனை என்பது
கானல் நீரில் படகுவிட
ஒரு வழியாய்
இந்த முற்றுப்புள்ளியில்
கரையேறியது அந்த முற்றுப்புள்ளி.
புரியாதவர்கள் கொட்டாவி விட்டார்கள்.
புரிந்தவர்கள்
எப்போதோ தூங்கிவிட்டார்கள்.
கனவில் போய்
சொற்பொழிவுக்கு அர்த்தம் பிழிந்து கொள்ளலாம்
என்று.
பாஷ்யம் முடிந்து வீட்டது.
இத்துடன் பிரம்மம் பற்றிய
சவ்வுப்படலம் முற்றிவிட்டது.

===============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக