சனி, 24 ஆகஸ்ட், 2019

அவள் வருவாளா?

அவள் வருவாளா?
=====================================ருத்ரா

அவள்
வருவாளா?
அவன் காத்திருந்தான்.
மெரீனா கடற்கரையில்.
ஒரு காகிதம் கிடைத்தது
சில சொற்களுடன்
என்னவோ காதல் சிற்பி
என்ற பெயரில்
யாரோ எழுதிய கவிதை.
என்னத்தை
எழுதியிருக்கப்போகிறான்.
அலட்சியமாக
அதை எறிய
சுருட்டிக்கசக்கினான்.
அதிலிருந்து குப்பென்று
ஒரு மணம்!

ஆவலுடன் பிரித்தான்.
ஆஹா!
அது தேங்கா மாங்கா பட்டாணி
சுண்டல் இருந்த மணம்.

அதற்கு மேல்
காதலின் நுண்மாண் நுழைபுலம்
அவனுக்கு இல்லை.
அந்த காகிதத்துக்கு
மணம் வந்தது எப்படி?
அது அவன் காதலி
சுவைத்து விட்டு போட்ட
சுண்டல் காகிதம்.

அந்தக் காகிதம்
பறந்து போயிற்று
அதில் இருந்த
ஒரு காதல் கவிதை
படிக்கப்படாமலேயே.

அது சரி.
அப்படி என்ன கவிதை அது.?
இப்போது படிக்கிறீர்களே
அது தான் இது.
தலைப்பு?
"காகிதத்துக்கும் மணம் உண்டு".


============================================


=======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக