திங்கள், 12 ஆகஸ்ட், 2019

"லைட் பாய் ரஜனி"

"லைட் பாய் ரஜனி"
================================================ருத்ரா

ரஜனி அவர்கள்
அமித்ஷா அவர்களை
வாழ்த்தியிருக்கிறார்.
எதற்கு வாழ்த்து?
தெரியவில்லை.
ஸ்க்ரிப்டும் ரெடியாக வில்லை.
படமும் ரெடியாக வில்லை.
ஆனாலும்
மீண்டும் மீண்டும் வாழ்த்து.
இன்னும் வெற்றிகள் குவிக்க வாழ்த்து.
ரஜனி அவர்களே
பாஷா வாக வந்து
உங்கள் ரசிகர்களின்
விசில்களுக்குள்
புயல் வீசினீர்களே.
அது அந்த பட வியாபாரத்தோடு
போயிற்றா?
ஆர்டிக்கிள் 370 ல்
ஜனநாயகம் பள்ளி கொண்டிருக்கிறது.
பாபர் மசூதியை இடிப்பது போல்
அதை இடித்துத்தள்ளிவிட்டு
இன்னும் கடப்பாரையை
கையில் வைத்திருக்கும்
அவர்களுக்கு
வாழ்த்துகள் வழங்குகிறீர்களே.
கடப்பாரையைக் கண்டு அச்சமா?
ஆவேசம் அல்லவா வந்திருக்க வேண்டும்.
ஜனநாயக நெறிமுறைகளின்
குரல்வளை நெறிக்கப்பட்டதற்கு
உங்களுக்கு சீற்றம் அல்லவா
வந்திருக்க வேண்டும்.
அது வெறும் இந்து முஸ்லீம் பிரச்னையா?
ஏதோ நேரு என்பவரால் போட்ட ஒப்பந்தமா?
இந்தியா
சுதந்திரம் எனும் இமைகளை
உயர்த்திய போது
இவர்கள் மதவெறியில்
கண்மூடிக் கிடந்தவர்கள் அல்லவா.
இப்போது காஷ்மீர் எனும் ரோஜா
தீப்பற்றி எரிவதற்கு
எண்ணெய் வார்த்தவர்களே இவர்கள் தான்.
எழுபது ஆண்டுகளாக
இந்தியாவை தன் இதயமாக
எண்ணியிருந்தவர்களிடையே
பகைமையயும் காழ்ப்புணர்ச்சியையையும்
விதைத்து விட்டு
ஆட்சி அறுவடை செய்ய வந்துவிட்டார்கள்.
பகையை மதங்கொண்டு பற்றவைப்பதில்
பயன் ஏதும் உண்டோ?
எல்லா நாடுகளும்
அணுகுண்டுகளை போன்சாய் மரங்கள்  போல‌
தங்கள் மேஜையில்
வைத்திருக்கின்றனவே!
அலங்காரத்துக்கா வைத்திருக்க்கின்றன?
பகைப்பொறி எங்காவது
சிதறினாலும் உலகமே இனி
சுடுகாடு தான்.
இதில் நாலு வேதமாவது? சனாதன‌மாவது?
எல்லா "த்வாக்களும்"
என்ன தத்துவம் பேசினாலும்
மிஞ்சப்போவது
மனிதக்கபாலங்கள் தான்?
மானுடம் காக்கும் பொறுப்புணர்ச்சியற்ற‌
வெறியை வைத்து
கணிப்பொறியை தட்டி விளையாடும்
இந்த செயல்களை
வாழ்த்துவதன் மூலம்
உலக அழிவுக்கே வழிவகுக்கின்றீர்கள்.
இந்த சுடுகாட்டுப்புகை மூட்டமா
ஆன்மீகம்?
தெளிவு அடைவீர் ரஜனி அவர்களே!
இன்று ஜனநாகக் கண்ணியத்தை
புண்ணாக்கி விட்டார்கள்.
இந்த "புண்"ணியத்தால்
சட்டத்தின் வாக்குறுதிகளில்
ரத்தம் சிந்துகின்றன.
சொல்லுங்கள்.
நீங்கள்
பாபா பக்தரா?
இல்லை இந்த‌
"பாப"பக்தரா?
ஜனநாயகம் வெறும் எண்ணிக்கை அல்ல.
கணிப்பொறி அத்தனை எண்ணிக்கைகளை
அளித்திருக்கக்கூடும் என்றால்
அந்த "எந்திரனே" வந்து ஆளட்டும்.
அந்த எத்திரத்தின் 2.0 ஆக வந்து
அக்கிரமத்தை தூளாக்கிய நீங்கள்
இப்போது அந்த எந்திரமே
தூளாகிக்கிடப்பது
உங்களுக்கு தெரியவில்லையா?
இப்போதும் அந்த மதவெறியின்
அல்கோரிதங்களைக்கொண்ட
கணினியையே பிரதமர் நாற்காலி
ஆக்கியிருக்கிறார்கள்.
அந்த விஷமத்து விசைப்பலகையே
சாதி மதங்களின் ஆதிக்கம் தான்.
அந்த கணிப்பொறி மகாபாரதத்து
அரக்கு மாளிகை ஒன்றை எழுப்பி
ஜனநாயகத்தை அதற்குள் சிறைப்படுத்தி
விட்டதோ
என்ற அச்சமும் ஐயமும்
மக்களிடையே நிலவுகிறது.
மேலும் மேலும் வெற்றிபெற‌
வாழ்த்துகள்
குவிக்கச்சொல்லி
உங்களை ப்ரோகிராம் செய்தவர்களை
எப்போது நீங்கள் புரிந்து கொள்ளப்போகிறீர்கள்?
சூப்பர்ஸ்டார் எனும் எரி நட்சத்திரம்
டூப்பர்ஸ்டார் எனும் "வால்"நட்சத்திரம்
ஆகலாமா?
அரசியல‌மைப்பை மனுஸ்ம்ருதியாக்கி
நான்கு வர்ண மத்தாப்பு கொளுத்தும்
அதர்மங்களும் அநியாயங்களும்
எரிந்து போகட்டும்.
ரஜனி அவர்களே
கபாலிடா! நெருப்புடா!
என்று கர்ஜித்த நீங்கள்
இது வெறும் கபடமடா
என்று
எங்கள் முதுகில் குத்த‌
முன் வரலாமா?
அமித்ஷா கிருஷ்ணர்
மோடி அர்ஜுனர்
என்றெல்லாம்
உங்கள் அரிதாரத்தை
அவர்களுக்கு பூச அரம்பித்து
எப்போது "மேக அப்"மேன் ஆனீர்கள்?
தமிழர்கள்
உங்கள் சூப்பர்ஸ்டார் கவச குண்டலத்தை
கழற்றி விட்டால்
அப்புறம் நீங்கள் இங்கு
வெறும் "லைட் பாய்" தான்.
அதனால் தான் இப்போதே
அவர்களுக்கு "ஃபோகஸ் லைட்"
அடித்து பழகுகிறீர்களோ?
யோசியுங்கள்!

================================================
11.08.2019




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக