வியாழன், 29 ஆகஸ்ட், 2019

இசைக்கடல்

இசைக்கடல்
================================28 ஆகஸ்டு 2019  இரவு 11.50



மதுரை சோமு
===================================ருத்ரா இ பரமசிவன்


ஒரு இசைப்புயல்
இனிய மூச்சை
உருட்டித்திரட்டி
பிழிந்து
கடைந்து கடலாகி
உயிரை
செதில் செதிலாய்
இழைவித்து
உடம்பின் ஒவ்வொரு
மில்லி மீட்டரிலும்
அல்லி அரும்பாக்கி
துள்ளி சுருண்டு...
அய்யா ..
இதற்குமேல்
என்னால்
எழுதமுடியவில்லை.
வானமே தேம்பி தேம்பி
அழுகையை அமுத மழையாக்கித்
தரும்
ஆனந்தக்கண்ணீர் மழை..
இது.
நரம்பு முடிச்சுள்
யாழை சுருட்டி மடக்கி
இன்னொலியின் பிரசவத்தில்
பிரபஞ்சமே
கன்னிக்குடம் உடைத்து
ஒரு சங்கீதப்பிரளயம்
பிறந்தது.

==================================================


என்.எல்.கானசரஸ்வதி.
================================================ருத்ரா இ பரமசிவன்.

கர்னாடக இசையின்
தேனருவி!
பந்து வராளியின்
தியாகராஜர் கீர்த்தனை
இந்த மெல்லருவியின்
தாலாட்டில்
இசையின்
ஏழுகடல்களும்
அலையடிக்க மறந்து
சுகமாய் தூங்கின.

==================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக