செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

தமிழ் வாழ்க!

தமிழ் வாழ்க!
===========================ருத்ரா இ பரமசிவன்.

தமிழ் வாழ்க!
தமிழ் வாழ்க! வாழ்க!!
தமிழ் வாழ்க!வாழ்க!! வாழ்க!!!

முதற் சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம்
என்று சுடர்ந்த தமிழ்
இன்று எங்கு ஒலிக்க வில்லை.
ஏடுகள் மட்டுமே
இயம்பிக்கொண்டிருக்கின்றன.

கும்பிடக் கடவுள் வேண்டும்
என்றவன்
தமிழில் ஏன் கும்பிட மறந்து போனான்?
ஏன் ?
தமிழில் அறிவு மட்டுமே அங்கு
கடவுளாய் நின்றது.
கடவுள் என்று
ஏமாறியவர்களும் ஏமாற்றியவர்களும்
தமிழ் மீது பாய்ந்தனர்.
பாய்ந்தவர்கள் தமிழர்களாகவும் இருந்தனர்.
பக்தி எனும் நஞ்சு
அவர்களின் அறிவு செல்களை
அழித்து விட்டிருந்தது.

அவன் மீது
ஒரு ஆதிக்க நிழல் விழுந்தது.
அந்த நிழல் பூசிய வர்ணங்களில்
தமிழன்
அடியில் புதைந்து போனான்.

குடை பிடித்து ஆண்ட மன்னர்களுக்கும்
குடை பிடித்து
குகை வைத்துக்கொண்டது
ஒரு குள்ளநரி வர்க்கம்.
அவர்கள்
கடவுள் தோல் போர்த்திய
கயவர்கள்!
கடவுள் தோல் அவர்களுக்கு
எப்படிக்கிடைத்தது?
கடவுளைக்கொன்று தான்,
ஏனெனில்
கடவுள்கள் அவர்களுக்கில்லை.
அவர்களுக்குள் இருந்ததெல்லாம்
தமிழ் இன அழிப்பும்
தமிழக ஆக்கிரமிப்பும் தான்.


வாயில் நுழையாத ஒரு மொழி
நம் வாசல் நுழைந்தது.
கிச்சு கிச்சு மூட்ட வந்தது போல் வந்த
அந்த இரைச்சல்களுக்கு
இரையாகிப்போனது நம் இனிய மொழி.
நமக்கு அறைஞாண் பூட்டும் போதும்
நம் வீடுகளின் வதுவை விழாக்களிலும்
ஏன்
நாம் இறந்து விட்ட போதும்
அதன் நமைச்சல் மந்திரங்கள்
நம்மை ஆழ் குழிக்குள் தள்ளின.

தமிழனின் மாபெரும் நாகரிகம்
மண்ணில் புதைந்து போன
எலும்புக்கூடுகள் ஆகின.

இன்று தமிழன் எரிமலை ஆகினான்.
தோண்டும் இடமெல்லாம்
அவன் வரலாறு
வீரம் கொப்பளிக்கிறது.
தொட்டனைத்த மண் தோறும்
தமிழின் சூரிய வெளிச்சம் தான்.

தமிழர்களே! தமிழர்களே !
"தன் திறம்" அறிந்து கொள்வீர்.
தந்திரம் முறியடிப்பீர்! நம்
"மன்திறம் "தெரிந்து கொள்வீர்.
மந்திரம் விரட்டிடுவீர்!

தமிழ் வாழ்க!
தமிழ் வாழ்க! வாழ்க!!

==========================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக