நெடுங்கதையா?
நெடிய நெட்டைப் பெருங்கனவா?
ஹோமர் விட்ட கொட்டாவியில்
பூதங்களும்
சிறகு முளைத்த மிருகங்களும்
கூந்தல் சர்ப்பங்களின்
மரணத்து மங்கைகளும்
ஏதோ ஒரு கனியைத்தின்று
தடம் மாறி தவிப்பவர்களும்
இன்னும் இன்னும்
போர்க்களத்தின்
கூரிய வாட்களையே
குடலும் வயிறுமாக காட்டி
ஏய்த்த பொய்க்குதிரைகளும்
அது துரோகமா?
அபகரித்தலின் வேட்டையா?
ரத்தம்
ஆறாகி கடலாகி
எதையோ பலிகேட்டது.
காலத்தின் பசி..
தீனியாகவே
எங்கும் எங்கும் மக்கள்!
முடிவின் வாய்
இன்னொரு ஆரம்பத்தை
கவ்வியத்தாக
மாயப்பாம்புகள்
நெளிந்து ஓடுகின்றன?
...............
___________________________________________
சொற்கீரன்
ஓடிஸ்ஸி பாருங்கள்.
முடிவில்லாத
நம் அரசியல் அனக்கொண்டாவின்
வயிற்றூள்ளும்
அந்த கூரிய பல்லின் முனையிலும்
அந்த முடிவு
ஆரம்பித்துக்கொண்டே இருக்கிறது
அந்த் சொட்டும் ரத்தம்
புஷ்பிக்கிறது
காலப்பிரளயமாய்...
______________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக