ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

கல் மட்டும் அல்ல புல்லும்

 


"உத்தமபுத்திரன்"கள் போல்

கவிதைக்கவசம் 

அணிந்து கொண்ட 

இரட்டையர்கள் தான்.

இவர்கள்

வில்லன்களும் அல்ல.

கதாநாயகர்களும் அல்ல.

இருவருக்கும்

பராம்ப்டர் ஒருவரே தான்.

அது 

சொற்பிரளயம்.

சோற்சுவாசத்தின்

வண்ண வாசல்களின்

எந்த வாசல் வழியாகவும் வந்து

இந்த கற்ப்னைப்பிரபஞ்சத்தின்

அஞ்சறைப்பெட்டியைத்திறந்து

கனவு மசாலாக்களை

தெளித்து விடுவார்கள்.

அதில்

கல் மட்டும் அல்ல புல்லும் 

சு"வாசிக்கும்"

___________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக