ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

மழை ஊசிகளை...

 வண்ணதாசன் அவர்கள்

எட்டிப்பார்த்த 

கண்ணாடி சன்னலில்

கவிதையாய்

துளிர்த்திருந்தார்

பழனி பாரதி.

வளையல் பூச்சிகள் கூட‌

வளையல் ஓசைகளை

க்ளுக் என்று 

காட்டியிருக்குமோ?

கவிதைக்கண்ணாடி

தூளாய் நொறுங்கி

கலைடோஸ் சித்திரங்களில்

மனம் நொறுங்கிய 

மழை ஊசிகளை

நனைய விட்டிருந்தது.

_________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக