சனி, 15 ஆகஸ்ட், 2026

கவிஞர் வண்ணதாசன் அவர்கள் கேட்டு உருகிய உருமி இது

 "என்னதான் சொல்ல வருகிறது அக்குரல்....?"

________________________________________________


"என்னதான் சொல்ல வருகிறது அக்குரல்....?"

அந்த உருமியில்

இன்னும் சுருண்டு சுருண்டு

அலை ததும்பிக்கொண்டிருக்கிறார்

அந்த "கண்மணி ராசா" அவர்கள்!

எங்கள் கல்லிடைக்குறிச்சியின்

அந்த "வேம்படியம்மன்" கொடையின்

பந்தல் அடியின் வட்ட வட்ட சூரிய ஒளியின்

காசு மழையில் நனைத்து

அந்த உருமியோடு

சுருதி சேர்த்து நின்றிருக்கிறேன்.

அது இசையா?

இழைவா?

ஓங்காரங்களின் அந்த மகா ஓங்காரத்தை

உரித்துக்காட்ட‌

இமயப்பனி உருகி

அந்த சிவன் இன்னும்

கருதரித்து வரவில்லை.

அந்த உருமிக்குள் தான்

டி என் ஏ ..ஆர் என் ஏக்கள் எல்லாம்

சங்கிலி கோர்த்துக்கிடகின்றன.

எழுபத்தெட்டு மேள்கர்த்தாக்கள்

இடுப்பு வலி யெடுத்துக்கிடக்கட்டுமே

இந்த உருமியே

மூச்சுகளின் உருவம் எல்லாம் காட்டும் 

பேருருவம்.

________________________________________

சொற்கீரன்.


கவிஞர் வண்ணதாசன் அவர்கள் கேட்டு உருகிய உருமி இது





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக