உன்னால் என்ன செய்து
விட முடியும்?
உன்னால் முடியும் தம்பி
என்று
ஜிகினாப்பட்டங்கள்
கச்சா பிலிமின் வானத்தில்
எத்தனை
மிதக்க விட்டோம்?
அன்று இமயத்தில் தமிழ்க்கொடி
என்று
முழங்கித்தீர்த்தோம்.
தமிழின் முதுகெலும்பு இன்று
முறிந்து கிடக்கிறது.
குவிந்து கிடக்கும் இந்த
ஈசல் சிறகுகளிலிருந்து
ஏதாவது ஒரு "மின்னல் பூச்சி"
விண்ணில் ஏறி
நம் விடியல் காட்டி விடாதா?
________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக