எவ்வளவு வெயிலோ
அவ்வளவு நிழல்!
எப்படி?
அப்படியானால்
வெயிற்கேற்ற நிழலுண்டுதானே?
இன்பம் அல்லது துன்பத்துக்கேற்ற
இன்பம் அல்லது துன்பம் உண்டு தானே.
ஒரு கவிதையைப்போல
இன்னொரு கவிதை உண்டா?
காகிதமும் பேனாவும்
கொஞ்சம் கசங்கிய சிந்தனையும்
போதும்
கவிதை பிரசவம் ஆகிவிட.
அது வலியா?
வலி தீரலா?
சுமையா? தீர்வா?
கவிதைக்குள் கோவிலும் உண்டு.
சாத்தானின் சாப்பாட்டுக்கூடமும் உண்டு.
எப்படியும்
மனிதனுக்குள்
மனிதனுக்கேற்ற
இன்னொரு மனிதன் உண்டு.
அந்த கோல்டன் ஈக்குவேஷனை
நிழல் பதிக்கும்
நிழற்பாடுகளை
நாம் நம் மடியில் ஒரு
செல்லம் கொஞ்சம்
நம் மூன்றாவது மனிதனாய்
இருத்திக்கொள்வோம்.
எல்லைகளையெல்லாம்
நொறுக்கிக்கொண்டு விடைக்கும்
பிரபஞ்சத்தின்
வேர்களின் கிளைகளின்
அந்த போன்சாய் "குட்டி மரத்தை"
வளர்த்துக்கொண்டு
வெட்டிக்கொண்டு
ஒரு மாயத்தின் பொழிப்புரையை
சொல்லிக்கொண்டே
இருப்போம்...இல்லை இல்லை
இருப்பேன்.
______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக