வியாழன், 25 செப்டம்பர், 2025

போதித்தான்

 



கடவுளற்ற ஒன்றை

பிசைந்து தந்தது

கடவுளே தான்.

ருசி பார்த்து சொல் 

என்றான்.

ருசி பார்க்கும் அந்த‌

அறிவு மனிதனிடமே உள்ளது

என்று

மறைத்து மறைத்து பாஷ்யம் 

சொன்னான்.

இருப்பினும்

மனிதனே தான் கடவுளுக்கு

போதித்தான்

கடவுளைப்பற்றி.

______________________________‍

சொற்கீரன்

மரம் படமாக இருக்கக்கூடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக