திங்கள், 15 செப்டம்பர், 2025

தமிழன் கண்டதே பிரம்ம சூத்திரம் ஆனது.

 

தமிழன் கண்டதே பிரம்ம சூத்திரம் ஆனது.

________________________________________________

சொற்கீரன்




தமிழன் கண்ட சொல் பிரம்மம் ஆனது.

"பிற" என்றால் தோன்று என்று பொருள்.

எது தோன்றியதோ அதுவே

"பிறமை" ஆகி "பிறமம்" ஆனது



"பிறமம்"


1.3....

_______________________


மேலே

கீழே

இருப்பதுவே

பிரம்மம்..........1


இதிலிருந்து

விடுபடுவதும்

பிரம்மம்...........2


அந்த சொல்லை

வேறு சொல் 

சொல்லாது........3


வேறு எந்த‌

உயிரின் உடலும் கூட‌

சொல்லாது.........4


அது ஒரு

வேறு பாட்டை

சொல்கிறது.........5


அது சொல்வதே

அது.................6


அங்கே இருப்பதும்

உண்டு வாழ்வதும் கூட‌

அது இல்லை..........7


அந்த உயிர் எனும்

திரட்சியையும் மீறி

அது எனப்படுகிறது.....8


எல்லைகள் இல்லாத‌

பரவையே அதன் 

ஒழுக்கம் ஆகிறது......9


அந்த அழியா பொருள்

வெளி எனும் 

ஆடை உடுத்தியது.....10


அதுவே 

எல்லாவற்றையும்

ஆள்கிறது...............11


___________________________________________

தமிழனின் ஓர்மைப்பொருள்

சமஸ்கிருதத்தில் பிரம்மம் ஆனது.

ஓர்மை "ஓர்ம்" எனும் 

மகரக்குறுக்கத்தில்

"ஓம்" ஆனது.

ஓர் என்றால்

அறி ..தெளி..

என்று பொருள்.

அந்த ஒன்று மட்டுமே

(சிங்குலர்) தான்

இங்கு "ஓர்" ஆகும்.

இது "பகுதி".

இதன் பெயர்ச்சொல் "ஓர்மை"ஆகும்.

எல்லாம் ஒரு அறிவில் ஒருமை அடைவதே

இங்கே "ஓர்மை" ஆகும்.


to be continued..


_______________________________________________________


___________________________________


வேறு பிறவற்றின்

உருவாக்கம் அல்ல‌

இது.................12


அது அப்படி

பார்க்கப்படும் பொருளும் 

ஆகும்................13


அதையும் கடந்து

உள்ளம் எனும் இருதய வெளியும்

ஆகும் அது...........14.


அது எங்கோ போகிறது

என்று பார்க்கப்படுவதும்

அந்த இதயம் எனும்

பிரம்ம உலகமே அது.

இதயம் இங்கு பிரம்ம 

அடையாளம்...........15


அந்த சிறுவெளி (இதயம்)

பிரம்மம் எனும் "பெருமிதத்தின்"

ஒரு இடமாகிறது........16.


அதை விட்டு அது ஒரு

வேறு பொருளாய் இருப்பது

என்பது நிகழக்கூடியதே அல்ல....18


அதுவே தான் அதுவாகவே

எங்கும்

அறியப்பட்டு விடுகிறது.........17


அப்படி அதற்கு மேலுமாய்

ஒன்று இருக்க முடியாது

ஏனெனில் அதுவே இங்கு

அதன் உருவமாய்த்தான்

வெளிப்படுகிறது...................19


வேறு பொருளிலும் 

அயலதாய் குறிப்பிடப்

படுவதும் உண்டு................20


அது ஒரு பொருட்டாக‌

சொல்லப்படுவது இல்லை.

அதாவது அது தள்ளப்படுவதாய்

கருதப்படும்.......................21


அதையும் அதனுடையதாக‌

அதாவது அந்த‌

பிரமமத்தினுடையாக‌

கொள்ளப்படும்.....................22









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக