புதன், 16 செப்டம்பர், 2020

உன் சிரிப்பு

 உன் சிரிப்பு

======================================ருத்ரா


உன் சிரிப்பு

ஒரு ஒற்றை ரோஜாப்பூவாய்

அன்றொரு நாள்

என் மடியில் வந்து விழுந்தது.

அது முதல் 

நான் இந்த வானம்.

அது முதல்

நான் கடலின் அலைகள்.

அது முதல்

எனக்குள்ளே

தமிழின் ஒலி.

உயிரெழுத்து

மெய்யெழுத்தைக்காட்டியது.

இலக்கணத்துள்

இலக்கியம் புதைக்கப்பட்டிருந்தது

இனிமையாய் நெருடியது.

உன் சிரிப்பின் மகரந்த சேர்க்கைக்கு

எத்தனை கருவண்டுகள்

சிறகுகள் கொண்டு

நிழல் போர்த்தியது.

இதன் நுண்மாண் நுழைபுலம்

மெல்ல கிசு கிசுத்தது

காதல் என்று!

ஆர்வம் மிக‌

அந்த ரோஜாப்பூவின்

நிறம் தேடினேன்.

அவை சருகளாய் கிடந்தன‌

ஆனாலும் 

அந்த சிரிப்பின் உயிர்ப்புடன்.

அத்தனை யுகங்களா கடந்து போயின?

இப்போதும்

அவை என் ரோஜாவின் "ஃபாசில்கள்"


======================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக