வெள்ளி, 4 செப்டம்பர், 2020

பேட்டி

 பேட்டி

====================================ருத்ரா


இப்படிப் பாத்தா இரு மொழிக்கொள்கை.

அப்படிப்பாத்தா மும்மொழிக்கொள்கை.


என்னது புரியலீங்களே?


நடப்புக்கணக்கு ஒன்று இரண்டு ...

என்று சொல்வது.

கணிதக்கணக்கு பூஜ்யம் ஒன்று இரண்டு..,

என்று சொல்வது.

அப்படின்னா இரு மொழி.

இப்படின்னா மும்மொழி.


அப்படின்னா

தேசிய வரிசையில் 

முதலில் வருவது இந்தி.

அடுத்து வருவது 

மாநிலத்தின் தாய்மொழி..தமிழ்.

அதற்கு அடுத்தது 

உலக மற்றும் இந்திய‌

பரிமாற்ற மொழி....ஆங்கிலம்.


அப்போ இந்தி..

அதான் பூஜ்யம் என்று ஆரம்பித்து விட்டதே


பூஜ்யம்னா..புரியலீங்களே

இந்தி படிக்கணுமா? வேண்டாமா?


படிக்கணும் ...ஆனா படிக்க வேண்டாம்..


எல்லாம் நம் மேதை "வடிவேலு" தலைமையில்

ஆராய்ச்சி செய்து எடுத்த முடிவு!


செய்தியாளர்களுடன் பேட்டி முடிந்தது.


====================================================

இது முழுக்க முழுக்க ஒரு கற்பனைப்பேட்டி.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக