சனி, 26 செப்டம்பர், 2020

கடவுள் கேட்டார்

 கடவுள் கேட்டார்

========================================ருத்ரா

என்னைப்பற்றி

என்ன தெரியும் உனக்கு?

கடவுள் கேட்டார்

ஒரு நாள்.

ஏன் தெரியாது?

பிரபஞ்சம் எனும் 

கருப்பையின் கரு நீ.

ஐந்து பூதம் என்று சொல்லி

ஐந்தாயிரம் பூதங்களை

சுருட்டி வைத்துக்கொண்டு

கையை விரித்து பூ என்று ஊதுவாய்.

கையில் பூஜ்யமாக நீ.

விஞ்ஞானிகளிடையே

ஹிக்ஸ் போஸான் என்பாய்.

அயோத்திக்காரர்களின்

அனுமார் வாலில் தீயைப் பற்ற‌

வைத்துக்கொண்டு...

போதும் போதும் 

திகட்டி விட்டது போலும்

கடவுளுக்கு.


அது சரி

உன்னோடு இருக்கும் 

சகமனிதனை நீ

எப்போதாவது நினைத்தது உண்டா?


அவன் ஆரம்பித்து விட்டான்.

ஆமாம்.

அடையாளம் தெரிய‌

வர்ணம் பூசி வைத்திருக்கிறோம்.

இதில் ஏதேனும் தவறு என்றால்

அப்புறம் 

எங்கள் கடப்பாரை தான் பேசும்.


அப்புறம் என்ன?

கடவுள் அங்கே

தவிடு பொடியாய்

நொறுங்கிக்கிடந்தார்.


===============================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக