வெள்ளி, 25 செப்டம்பர், 2020

கொந்தளிப்பு

 கொந்தளிப்பு

=================================ருத்ரா


அடர்ந்த மரநிழலில் செல்லும்போது

உன் கூந்தலைக் கோதியதாய்

உணர்கிறேன்.


பளிங்கு நீரோடையில்

கால்கள் அளைந்த போது

நடப்பது நீயாகவும் 

ஓடை நானாகவுமாக‌

உள்ளம் சிலிர்க்கிறேன்.


பட்டாம்பூச்சிகளின்

பண்ணையில் 

உன் இமைச்சிறகுகளின்

இனிய கூடாரத்துள் 

நுழைந்த கனவுகளின் 

மயக்கம் 

என்னைத்துவள வைத்தது.


அன்று 

திடீரென்று உன் கடிதம்.

ஆனால் அதில்

கடைசியில்

உன் கையெழுத்து மட்டுமே

இருந்தது.

பின் குறிப்பு சொன்னது.

அது என் இசிஜி மட்டுமே.

இதயத்துடிப்பினைக்கேட்க‌

நேரில் வா.

இப்போது என் இதயம் 

இருந்த இடத்தில்

ஏழு கடலின் கொந்தளிப்பு.


===========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக