செவ்வாய், 8 மே, 2018

"இருட்டு அறையில் முரட்டுக்குத்து"

"இருட்டு அறையில் முரட்டுக்குத்து"
==============================================ருத்ரா

சரியான குத்து.
முகம் எல்லாம் ரத்தம் வழிகிறது.
நியாயங்கள்
கழுவேற்றப்படவும்
தராசு முள் பயன்படுகிறது.
இருட்டறையில்
பிலிம் கழுவி
வெளிச்சத்திலும்
அவர்கள் காட்டியது
மரண இருட்டு.
ஆபாசங்களின் ஆபாசம் இது.
ஆம் இது
சொற்கூட்டங்கள்
பிசைந்த
காகிதங்களில்
உயிர் எழுத்துக்கள்
அல்லது
எழுத்தின் உயிர்கள்
கற்பழிக்கப்படும்
ஆபாசம் இது.
மண்ணின் நீதியை
மக்களின் உரிமையை
கசாப்பு செய்யும் ஆபாசம் இது.
படத்தின் பாகம் 2
இன்னும் சில நாளில் ரிலீஸ்!
வாயில் ஈ என்ன‌
டினோசார்கள் நுழைந்தால் கூட‌
தெரியாமல்
வாய் பிளந்து கேட்கிறீர்கள்.
இது என்ன சினிமாக்கதையா?
அவர்கள்
நம் காவிரியை
நம் மீதே எச்சிலாய்
புளிச்சென்று
துப்பும் ஆபாசம் இது.
பரவாயில்லை என்று
முகத்தைத்துடைத்துக்கொண்டு
அடுத்த "துட்டு"க்கு (ஓட்டுக்கு)
கியூவில் நிற்க தயார் ஆகி விட்டீர்களா?
உயிர் இழந்த ஜனநாயகத்தை
ஆலிங்கனம் செய்துகொள்ளும்
ஆபாசம் தானே இது.
என்ன ஏது என்று தெரியாமல்
பட்டன் தட்டுவது தானே அது!
வள்ளுவன் இதைத்தான் அன்றே சொன்னான்
பொட்டில் அறைந்து!
"...இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று."

===================================================



2 கருத்துகள்:

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி

Vignesh சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

கருத்துரையிடுக