புதன், 28 பிப்ரவரி, 2018

ஜெயேந்திரர்

ஜெயேந்திரர்
==========================================ருத்ரா

இவர் ஆன்மா சாந்தியடையட்டும்.
சுருதிகளை நெட்டுரு போடுவதால்
ஜன சங்கத்துள்
சுருண்டு கிடக்கும் அந்த‌
பிரம்மத்தை எப்படி தரிசிக்க முடியும்?
வேள்விக்குள் வேள்வியாக‌
வளர்த்த முதல் கேள்வியின்
வெப்பம் தாங்காமல்
"ஜனகல்யாண்" என்றை
அமைப்பை விதையூன்றிய‌
பெருந்தகை இவர்!
"புதுப்பெரியவா"
என்று
ஒலியிறுதியில்
உதடு தொட்டு எச்சில் படுத்தாமல்
இவரை
வெகு மரியாதையாய்
அழைத்தார்கள்  பிராமணர்கள்.
இந்து மதம்
ஒரு "இந்து மகா சமுத்திரமா?"
இல்லை
நான்கு வர்ணத்துள்
முதல் வர்ண‌
வெள்ளிக்குடுக்கைக்குள்
அலை அடிப்பதா?
ஆதி சங்கரரின்
விவேக சூடாமணி
பிரம்மம்
தன் க‌ண்ணாடி பிம்பத்தை
நமக்கு காட்டுவதே "மாயை" என்கிறது.
ஜீவாத்மாவும் பரமாத்மாவும்
ஒன்றுக்கொன்று ஆபாசம்.
அதனால் தான்
அத்வைதம் அத்வைதம் என்கிறார்கள்.
நாய் மாமிசம் சாப்பிடுபவனும்
தயிர்ச்சாதம் சாப்பிடுபவனும்
அந்த ஒரே நரம்பு ஓட்டத்தில் தான்
பிரம்மத்தை துடிக்கிறார்கள்.
இதில்
ஐ ஐ டிக்குள் பாடப்படும்
கணபதி ஸ்லோகம் தான்
எல்லாம் என்று
"சாதி"ப்பது
எந்த வகையான சாதி?
மகா சமாதி அடைந்த
துறவியின்
சாகாத கேள்வியும்
இதுவாகத் தான் இருக்கும்
என்பதில் நமக்கெல்லாம்
ஐயம் இல்லை.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி

==================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக