செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

தமிழே தமிழே

தமிழே தமிழே
========================================ருத்ரா

தமிழே தமிழே
தினம் தினம் ஒலிக்கின்றேனே!
உன் செவிகளில் நுழைகிறதா?
நீ எங்கோ
கல் தோன்றி
மண் தோன்றா காலத்தே
கலந்து கிடப்பதாய்
செய்யுள் புனைந்தனர்.
இங்கே இவர்களுக்குள்
சமஸ்கிருதம் ஒரு
சமஸ்தானமாய் தைத்துக்கிடக்கிறது.
"தமிழா
உன்னை நீயே
இப்படி கூப்பிட்டுப்பார்"

கூப்பிட்டு பார்க்கிறேன்.
எதற்கும்
அதற்கு ஒரு "முகூர்த்தம்"
பார்த்து "ஹோமப்பரிகாரம்"
செய்த பின் தான்
ஆவாஹனம் செய்யவேண்டும் என்றான்.

சரி தான்.
அந்த இருட்டிலேயே
கல்லாய்க் கிட.

ஆனாலும்
"ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்"
ஆசனம் தயார்.
இனி அங்கிருந்து தான்
ஹரி ஓம் குருவே நமஹ சொல்லி
வித்யாப்யாசம் செய்ய‌
அரிசியில் எழுதவேண்டும் என்று
பவ்யமாய் சொல்கின்றான்.

=============================================





.

1 கருத்து:

KILLERGEE Devakottai சொன்னது…

தங்களது ஆதங்கம் புரிகிறது நண்பரே

கருத்துரையிடுக