செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

வேலண்டைன் குறும்பாக்கள்

வேலண்டைன் குறும்பாக்கள்
========================================ருத்ரா


அது என்ன அவன்கையில்
மயிர்ப்பீலிகளின் பிசிறுகள்?
அவனது "மயிலு"வின்
பெருமூச்சுகள்!

_____________________________________

ஒவ்வொரு தடவையும்
அவன் "வானவில்லை"
இரவில் தேடுகிறான்.
அதிலிருந்து அவளுக்கு
வளையல்கள் செய்து கொடுக்க.

__________________________________

ஓ அனுமார் சேனைகளே!
உங்களுக்கு வடைமாலை
மட்டும் தான் தெரியுமா?
"அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்"
என்ற வரிகள் தெரியாதா?

____________________________________

செமஸ்டர்கள்..
காதல் சிவ பூஜையில்
எதற்கு இந்த கரடி?

_____________________________________

அவர்கள் கைபேசிகள்..
கொட்டிக்கவிழ்த்தால்
கடல் கடலாய் சொற்கள் அற்ற‌
மூளி மவுனங்கள்.
கம்பெனிகளுக்கு
பில்லியன் பில்லியன் டாலர்கள்.

______________________________________

இதயங்கள்..
இதைத்தொலைத்து விட்டதாக‌
தேடி அலையும் நெரிசல்களின்
காலடியில் நசுங்கின‌
அந்த "லப் டப்"பு கள்!

‍‍‍‍‍‍‍‍_____________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக