செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

நிழல்




நிழல்
=====================================ருத்ரா

ரத்தமும் சதையுமாய்
வண்ணப்பூ வேலை செய்தது போல்
பூமியில்
ஒரு ரத்னக்கம்பளம்
விரித்து வைத்து இருக்கிறேன்.
என் வேலைக்காரன் சூரியன்.
அவனே தினம் தினம்
இதை சுருட்டுவதும் விரிப்பதும் ஆக
இருக்கிறான்.
அவன் சுருட்டி வைத்தாலும்
உங்கள் மின்சார முண்டைக்கண்கள்
விரித்து வைக்கின்றன.
இது அழியாத காகிதம்.
லட்சம் லட்சமாய்
எத்தனைக்காலடிகளைக்கொண்டு
என் மீது சாணி மிதிக்கிறீர்கள்.
இந்த மௌன காகிதத்தில்
உங்கள் உள் மடிப்புகள் 
என்றைக்கும் எழுத்துக்களாய்
தூவப்பட்டதில்லையே !
ஆனாலும்
இங்கே உங்கள்  ஞான பீடங்களும்
சாஹித்யா அகாடெமிகளும்
உரை போட காணாது.
இந்த கம்பளம்
உங்களைப்போல்
வெறும் பாலைவனம் இல்லை.
அதோ
என் கவிஞர்கள் வந்து விட்டார்கள்.
சற்று நேரத்தில்
மரக்கிளைகளில்
குயில்களும் ஊசிக்ருவிகளும்
வந்து விட்டன.
அவற்றின் அமுத மழையில்
அந்த நிழற்கம்பளம்
உயிர் பூசிகிடந்தன!

================================================



2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

நிழல் கவிதையில் சற்றே இளைப்பாரினேன்

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

இந்த "நிழலில்" தாங்கள் வந்து அமர்ந்ததற்கு மிக்க மகிழ்ச்சி;நன்றி
நண்பரே!

கருத்துரையிடுக