வியாழன், 15 பிப்ரவரி, 2018

கமல் அவர்களே ...

கமல் அவர்களே ...
=========================================ருத்ரா

ஒரு நம்பிக்கை நட்சத்திரம்
மா மனிதர் அப்துல் கலாம்
பிறந்த இடத்திலிருந்து
சுடர்ந்து வரப்போகிறது என்று
அரசியல்  ஏட்டாளர்கள்
எழுத்துக்கூட்டி
சோழி
குலுக்கிக்கொண்டிருக்கிறார்களே !
ஒரு மாற்றத்தின் புயல்
கருமையம் கொள்ளுமா?
புயலுக்கு கூட
பெயர் சூட்டியாகி விட்டதே
"நாளை நமதே "என்று .
ஆனால்
"இன்று ரொக்கம் நாளை கடன் "
என்று
கடைகளில் "போர்டு" மாட்டுவது போல்
அல்லவா இருக்கிறது.
ஜனநாயகம் என்றாலே
பெரும்பான்மையின் ஆட்சி
என்பது தானே
அரசியல் பரிணாமத்தின் மலர்ச்சி.
அதைப்பற்றி
யாருமே
இங்கு கவலைப்படவில்லையே !
மத்திய அரசின் "சனாதன"சவுக்கு நுனி
மக்கள் மீது சுரீர் என்று குத்துகிறது.
சமூக நீதிக்கு ரத்தம் கசிகிறது.
நம் தமிழ் எனும்
உயிருக்கோ
ஆழமாய்ப் படுகுழி வெட்டப்படுகிறது.
தமிழின் தொன்மை பற்றிய
சிறந்த ஆராய்ச்சி  முடிவுகள் எல்லாம்
"காயலாங்கடை" எழுத்தாளர்களால்
கசாப்பு செய்யப்படுகிறது.
உலக நாயகன் அவர்களே !
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
என்ற கணியன் பூங்குன்றனின்
உலக மானிட ரோஜாவை
அந்த "ஹார்வர்டு இருக்கையில்"
பதியம் போட
அங்கு முகம் காட்டினீர்கள்.
எங்களுக்கெல்லாம் பெருமை தான்
ஆனாலும் தமிழன்
இந்திய நாட்டு குப்பைத்தொட்டிகளிலா
கிடப்பது?
மோடிஜியின் "தூய்மை இந்தியா" திட்டத்தில்
ரகசியமாய்
தமிழனின் சுயஆட்சிக்குரல்கள் அல்லவா
கூட்டிப்பெருக்கித்தள்ளப்படுகிறது.
உங்கள் பயணம் இன்னும்
சில தினங்களில் துவங்க இருக்கிறது.
"வழியில் ஆறு குறுக்கிடும் போது
பார்த்துக்கொள்ளலாம்"
என்ற பழமொழியை அசைபோட்டுக்கொண்டு
எதோ " பாத யாத்திரை"
கிளம்புவது போல் கிளம்பினீர்கள்
என்றால்
உங்கள் நண்பர் சொன்னது போல்
அப்புறம்
இந்த தமிழ் நாட்டை
ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

=======================================================










2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

ஸூப்பர் புத்திமதி நண்பரே

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி நண்பரே.

கருத்துரையிடுக