திங்கள், 12 பிப்ரவரி, 2018

காதலர் தினம்

காதலர் தினம்
============================ருத்ரா இ.பரமசிவன்

நகருக்குள் அனுமார் படை
அணிதிரண்டு வந்தது.
குண்டாந்தடிகளுடனும்
கதாயுதங்களுடனும்.
ஒரு அழகிய பூங்காவில்
இரு
உடல்கள்
ஒரு மனத்தோடு
தழுவிய
ஆண் பெண் சிலையை
அடித்து தூளாக்கியது
ஆவேசமாய்.
அதில் இரண்டு சில்கள்
தெறித்து
எங்கோ விழுந்தன.
அழிந்து போய் மங்கலாய்
இரு பெயர்கள் அதில்.
ஒன்றில் ராதா
ஒன்றில் கிருஷ்ணன்.

=========================================
பெப்ருவரி 2016ல் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக