திங்கள், 12 பிப்ரவரி, 2018

திறந்து பாருங்கள்

திறந்து  பாருங்கள்
===========================================ருத்ரா

ராமன் ஆண்டால் என்ன?
ராவணன் ஆண்டால் என்ன?
என்று
நீங்கள்
கண்ணை மூடிக்கொண்டிருப்பதில்
யாருக்கும் இங்கு
மில்லி மீட்டர் கூட கவலையில்லை.
கவலையில்லாத மனிதனாக
உலா வர‌
மில்லிகளில் மூழ்கினாலும்
இங்கு எவருக்கும் கவலையில்லை.
நூறு அடிக்கும் மேல்
ஒரு சிலையின் முன்
கண்கள் மூடி உறைந்து கிடந்தாலும்
கவலையில்லை.
இயற்கையே முண்டியடித்து
ஒரு மனிதனாக முகிழ்த்தது.
முகிழ்த்தது சிந்தித்ததே
கடவுள்!
ஆம்.அது வெறும் கற்பனை விளையாட்டு.
ஈசாவாசம் என்று
ஒரு சமஸ்கிருதப்புகைமண்டலத்தில்
உட்கார்ந்து கொள்ளுங்கள்!
அதற்கு உட்கார‌
அழகிய தமிழ் எனும் மானின்
பதப்படுத்தப்பட்ட தோல் தான் கிடைத்ததா?
குட குடமாய்
ஹெலிகாப்டரில் இருந்து கூட‌
அந்த சிலை
நெய்யால்
தேனால்
குளிப்பாட்டலாம்.
இதுவும் ஒரு
"கட் அவுட்" பால்குட
கலாச்சாரம் தான்.
மனம் முளைக்காதவர்களின்
அறிவு முளைக்காதவர்களின்
இந்த பொம்மை விளையாட்டைப்பற்றியும்
இங்கே யாருக்கும் கவலையில்லை.
இருட்டுக்குள்ளே
நடத்துகிற உங்கள்
கூத்துகள் என்னவென்று
உங்களுக்கு கொஞ்சமாது
வெளிச்சப்பட வேண்டாமா?
அதற்காவாவது
அறிவுச்சுடர் கொளுத்தி
 உங்கள் சன்னலை
கொஞ்சம்   திறந்து பாருங்கள்!

========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக