புதன், 14 பிப்ரவரி, 2018

மனமே நலமா?




மனமே நலமா?
===========================ருத்ரா இ பரமசிவன்

நிலவு அழகாய் இருக்கிறது
என்று சொல்வதை விட‌
அந்த அசையாத நீரின்
பளிங்குப்படலத்தில்
ஒரு சிறு கூழாங்கல் எறி.
அந்த நிலவின் பிம்பம்
கசக்கி கசக்கி பிழியப்பட்டு
உன் கண்களையும்
கசக்கிப் பிழிந்து விட்டு
சிறிது நேரத்தில்
நிலைத்து நிற்கும்.
இந்த நிலவின் அழகில்
நூறு நிலவுகளை சலவைசெய்த‌
வெள்ளை நிலா தெரியும்.
இப்போது நீ புரிந்து கொண்டிருப்பாய்
இது வரை சுக்கல் சுக்கலாக‌
உடைத்து நொறுக்கப்பட்ட‌
உன் மனது
ஒரு பளிங்கின் கவிதையாகி இருப்பதை!

============================================
01.02.2017 ல் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக