திங்கள், 9 மார்ச், 2026

வண்ணதாசனின் "மழ வில்லுகள்"

 

வண்ணதாசனின் "மழ வில்லுகள்"

_________________________________________

சொற்கீரன்


வண்ணதாசனின் வானவில்லுகள் என்று 

அவருடைய கவிதைச்சில்லுகள் தெறித்த‌

வண்ணங்களை ஒக்காந்து 

"அசைபோடும் குறுக்குத்துறை படிக்கட்டுகளாக்கி 

அமர்ந்து ரசிப்பதே 

இந்த "வண்ணதாசனின் மழவில்லுகள்".

பாருங்கள் நம் மலையாழத்தமிழ் 

வானவில்லை எவ்வளவு

கவிதைத்தனமாய் வருடி வருடி சொல்கிறது

"மழ வில்லு"ன்னு!


___________________________________________________



அந்தக்கடிக்காரததை

குலுக்கி குலுக்கி

உசுரு இருக்காண்ணு 

பார்க்கிறது தான் கவிதை.

ஆத்துத்தண்ணி முழிச்சிட்டுருக்கா

தூங்கிக்கிட்டுருக்காண்ணு

கொள்ளிகாட்டைய வச்சு துப்பறியும்

சீடர்கள்ளாம் இல்ல இவங்க.

காது கூர்மைக்குள்ள‌

ஆயிரம் ஃபேவர்லூபா வாச்சுக‌

இருக்காக்கும் இவங்களுக்கு.

அந்த "காலம்" குலுக்குனதுக்கெல்லாம்

கோவப்படல..

எல.. இவங்களுக்கு எப்டிலெ

காது இவ்வளவு கூர்மைன்னு

தெகச்சுட்டுதுலெ.

இந்த சவத்து மூதி இப்டில்லாம்

எசலும்ணுதான்

நம்ம பயலுவ இப்ப‌

வினாடி முள்ள சொருகி வச்சுருக்காம்லே

வாச்சுக்குள்ளெ.


___________________________________________________________

சொற்கீரன்

ஞாயிறு, 8 மார்ச், 2026

குடமுருட்டி சங்கரன் கோவிலுக்கு..

 

கோமதிகளுக்குள்

வேறு கோமதி

யாராவது இருக்கிறார்களா

என்று

தட்டாமாலை சுற்றும் பேனாவை

எங்கள்

அம்பாசமுத்திரம் 

குடமுருட்டி சங்கரன் கோவிலுக்கு

வரச்சொல்லுங்கள்.

அந்த ஆற்றங்கரை நாகரிகத்தில்

தடுக்கி விழுந்தால் கூட‌

ஒரு கூழாங்கல் சொல்லும்

"என் பெயர் கோமதி" என்று.

தெய்வங்கள் தோன்றிய போதே

அவற்றின் "மகளிர் தெய்வங்களும்"

தலையில் ஒரு

தவ மூட்டை சுமந்து

"தபஸ்'இருக்கவேண்டும்

நல்ல கணவன் கிடைக்க‌

அல்லது

தான் விரும்பிய கணவன் கிடைக்க.

மகளிர் விடுதலைக்கு

தபஸ் இருக்கும் கோமதிகளே

இன்று காண்கிறோம்

அன்றாட அடுப்புக்கூட்டின்

அக்கினிச்சிறகுகளிடையே.

கணிப்பொறியின் உச்சியேறியும்

அங்கு ஒரு "கைலாச மலை"தேடும்

பாசி பிடித்த பார்வைகளில்

சிகப்புச் சூரியன்கள் இடறிய போதும்

கைபேசி கிளுகிளுப்புகள்

சும்மா விடுவதாயில்லை.

ரமேஷ் கண்ணன் அவர்களே

உங்கள் எழுத்து ஊர்வலத்தின்

வீட்டுச்சித்திரங்கள்

வீதி முனை வரை வந்து

எத்தனை புள்ளி கோலம் போடலாம்

என்று அந்த 

சுண்ணாம்புச்சிரட்டையை

வருடிய போது கூட‌

ஞானம் தெறிக்கலாம்...

இந்த சிரட்டைகளில் பெரும் யுகத்தின்

கங்கோத்ரிகள்

கர்ப்பம் தரிக்கலாம் என்று.

__________________________________________

சொற்கீரன்


(முகநூலில் பதிவிட்ட திரு ரமேஷ் கண்ணன் அவர்களின்

கவிதையில் விழுந்த எனது நிழல்.)



யுகப்புரட்சி

 


யுகப்புரட்சி

_______________________________________________

வளைக்கரங்களில்

கிளு கிளுப்பு ஓசைகளை

பதுக்கி வைத்து

காதல் எனும் ஒரு

அக்கினி மூலையை

மறைத்து வைத்திருந்த பெண்ணே!

"மணம்" எனும் மத்தாப்புக்காட்டில்

மகிழ்ந்து 

இல்லம் எனும் அடுப்புக்கூட்டில் நுழைந்தபின்

வந்த இன்னொரு அக்கினிக்காட்டிலும்

உன் சமையல் சாணக்கியத்தால்

ஒப்பற்றதோர் ஆட்சி செய்கிறாய் நீ  என்று

இவர்கள்

எப்போதும் புகழ்ந்து கொண்டிருப்பார்கள்

இன்ப நெருக்கடிகளின்

கொசுக்கடிகள்

எப்போதும் இருவருக்கும்

பொதுவாகவே இருந்தபோதும்

பாசம் எனும் பூரிப்பு

உனக்கு மட்டுமே ஒரு

பொன்முலாம் பூசுகிறது என்றும்

ஆயிரம் இமயத்துச்சுமைகளின்

அற்புத சுமைதாங்கி நீயே என்றும்

இவர்கள்

ஒரு மகுடம் சூட்டுவார்கள்.

பிள்ளைத்தாய்ச்சி எனும்

இந்த மொத்த பிரபஞ்சத்தையும்

உன் மீது ஏற்றிவிட்டு

இவர்கள் மயிற்பீலி கிலு கிலுப்பைகளால்

உன்னை வருடிக்கொண்டிருக்கும்

விளையாட்டுகளை மட்டும்

செய்து கொண்டே இருப்பார்கள்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

நீ

சுமந்த புராணங்களும்

சடங்குக‌ளுமே 

உன் விலங்குகளின் மூட்டைகள் தான்.

இதிலிருந்து 

விடுதலைக்கு

உனக்கு பீரங்கிகள் தேவையில்லை.

அந்த அஞ்சறைப்பெட்டிகள் எல்லாம்

இனி உன் அறிவுப்புயல்களின்

நுண்ணறிவுப் பெட்டகங்கள் ஆகட்டும்.

மானிட மலர்ச்சிக்கு

எந்த விடுதலைப்போர்களும் தேவையில்லை

உனது இந்த‌

அறிவு விழித்த 

யுகப்புரட்சி ஒன்றே போதும்.

பெண்ணே!

உன் கண்ணுக்கு 

மை தீட்டிக்கொள்ளும் முன் உன்

பெண்மைக்கு

அறிவின் ஒளி தீட்டிக்கொள்!

______________________________________________

சொற்கீரன்

சனி, 7 மார்ச், 2026

பூ!

 

மகளிர் தினம்.

__________________________


பூ!

அப்படியே விடுங்களேன்

தனக்கான புயலை

அதுவே வீசிக்கொள்ளட்டும்!

_____________________________

சொற்கீரன்

புதன், 4 மார்ச், 2026

விசில்கள்

 

கனவுகளை

காய்ச்சி வடித்து

குத்து டான்ஸ் 

ஊறுகாயும் 

பஞ்ச் டையலாக்கும்

சேர்த்த சரக்குகளின்

நிழலாட்ட க்கிட்டங்கிகளே


 


சினிமா சினிமா சினிமா.


பொழுது போக்கு 


குடை ராட்டினங்களின்


காதல் காளான் குடைகளின்


நாய்க்குடைகளிலா


உங்கள் லட்சிய நிழல்கள்


கூடு கட்டும்?




நம் அவலங்களின்


நடப்புகளையெல்லாம்


மரக்கடிக்க‌


மறக்கடிக்க


போடும்


போதை ஊசிகள் தான்


மசாலாப்படங்கள்.


அரசியல் எனும் வெளிச்சம் 


படாத 


கொசுக்கிடங்குகளில்


டூயட்டுகள் பாடி


நமக்கு நாமே


அரிதாரம் பூசிக்கொள்வது தான்


சினிமா எனும்


"கச்சா பிலிம்" காடுகள்.


விடியல் தேடி


வாக்கு ஏந்தி வருபவர்களே


கானல் நீர் ஈசல்களே


விழித்தெழுங்கள்.


உதிரப்போகும் உங்கள்


சிறகுகள் மூடி


விசில்கள் எனும் சில்லரைச்


சத்தங்களில்


தோலைந்து போய் விடாதீர்கள்.


அட்டைக்கதாநாயகனா உங்கள்


அடைக்கலம்?


விழித்தெழுங்கள்


______________________________________


சொற்கீரன்


ஞாயிறு, 1 மார்ச், 2026

"மோக முள்ளின்"...

 



ஒரு பெருங்கதையாடல்!

_____________________________________


ஒரு ராமாயணத்தை

இன்னொரு மகாபாரதம் கொண்டு

சப்ளாக்கட்டையை

தட்டி தட்டி 

சுரங்களையும் அசுரங்களையும்

கலந்து பிசைந்து

கதைக்கும் பெருங்கடலா இது?

தெரியவில்லை.

எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்கள்

இன்னொரு

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின்

எழுத்துக்களின் 

நாடித்துவாரங்களுக்குள் எல்லாம்

புகுந்து புகுந்து

தும்மல் போட்டு போட்டு

புல்லரித்துக்கொள்வது தான் இது.

இரு கல்லும் மோதி

பொறி பறக்கும்

சிக்கிமுக்கி கல்லாக‌

சிந்தனைகளின்

கற்பனை நிகழ்வுகளின்

உரசல்களையெல்லாம்

தேன் பிழிந்து தருவது தான் இது.

இப்படித்தான்

கும்பகோணம் 

அணைக்தால் தெருவுக்குப் போனால்

"மோக முள்ளின்"

பாபுவும் யமுனாவும்

அங்கே தூசிகளிலும் 

காத்துப்பிழம்பின் நெஞ்சுத்துடிப்புகளிலும்

காதல் கொப்பளிக்காமல்

குமிழிகள் விட்டுக்கொண்டே இருப்பதை

புளகாங்கிதத்துடன்

"பௌராணிகம்" செய்வதும் தான் இது.

பவா செல்லத்துரை

நாவல்களின் 

"லைவ்" நாவல்கள்.

இலக்கு இல்லாத திசைகளையும்

கோர்த்து இலக்கிய அனுபவத்தின்

ஆச்சரியமான திசைகளைக்கொண்டு

அருந்தத் தரும் 

அற்புதக்"குடி"யிருப்பு

பவா செல்லத்துரை அவர்கள்

_____________________________________________

சொற்கீரன்

சனி, 28 பிப்ரவரி, 2026

vannadaasan kavithai /01.03.26

 


வண்ணதாசன் அவர்களே!


என்ன இப்படி?

ஒரு தீயை அள்ளிப்பூசி

பசியின் கொடும் தீக்கொழுந்து வைத்து

நகங்களுக்கு

விடியல் நகப்பூச்சு பூசுவது போல்

அந்த அழகிய முதுகு மழலைப்பெண்ணின்

முகம் காட்டி

நெஞ்சத்தை கிள்ளி விட்டீர்கள்.

மாவிலை செம்புத்தளிர்

சொட்டிக்காட்டியிருக்கும்

நெருப்பாற்றங்கரை நோக்கிய‌

உங்கள் ஆற்றுப்படைக்குள்

இந்த கற்பாறைகளை

உடைத்து நொறுக்கும்

ஆயுதப்படையிலும்

தேமா புளிமாக்களும்

க‌ருவிளங்கண்ணி 

கூவிளங்கண்ணிகளூம்

கூவிக்கொண்டு தானிருக்கின்றன.

______________________________________

சொற்கீரன்.

ஆற்றுப்படை

 


THIS IS MINNOOTTAM FOR "RAMESH KANNAN:'S KAVITHAI ON HIS FACE BOOK ON 

01.03.2016

______________________________________________________________

என்னடா இது.

எசப்பாட்டுகளின் தொல்லையாகிப்போச்சு

என முணுமுணுக்க வேண்டாம்.

ஒரு கவிதையை

ஒரு கவிதையால் தானே பார்க்கவேண்டும்.

கவிதையை படிப்பது அல்ல இது.

ஒகோ!

அவ்வளவு பெரிய அப்பா டக்கரா நீங்கள்?

கருக விட வேண்டாம்.

தளிர் விடும் கவிதை ஆர்வங்களை.

அந்த சொற் துண்டங்கள்

குத்தி குத்திச் சொருகி கொடுத்திருந்த‌

உங்கள்

எழுத்துக்கோர்வைகளின்

ஆற்றுப்படை 

உண்மையிலேயே

சுவையோ சுவை!

அருமையோ அருமை!

________________________________________

சொற்கீரன்

அப்போது பிறந்தது தான்.

 

நீங்கள் யாருடைய பிள்ளைகளாக‌

இங்கே பிறக்கப்போகிறீர்கள்?

என்னுடையவர்களாக‌வா?

அவனுடையவர்களாகவா?

இறைவனும் கேட்டான்.

சாத்தானும் கேட்டான்.

சரி.

ஓட்டுப்பெட்டி வைக்கலாம்

எனப்பட்டது.

ஓட்டுபெட்டி முன்னே

குவிந்தனர் கூட்டம் கூட்டமாய்.

ஓட்டுகள் குவிந்தன.

எண்ணப்பட்டன.

இருவருக்கும் சமமாய்

ஓட்டுகள்!

என்ன?

எனக்கு ஓட்டுப்போட‌

இன்னும் இங்கு எவரும் இல்லையா?

என்று

இருவருமே கேட்டனர்.

வெகு நேரம் ஆயிற்று.

யுகங்கள் ஆயிற்று.

கோடி கோடி காலங்கள்

வந்து வந்து

மறைந்து போயின.

அவர்கள் இருவர் மட்டுமே நின்றனர்.

அவர்கள் 

கை குலுக்கிக் கொண்டனர்.

என்ன செய்யலாம்?

அவர் ஓட்டு இவருக்கும்

இவர் ஓட்டு அவருக்கும் 

விழுந்தன.

அப்போது பிறந்தது தான்.

மனிதமும்

மனித அறிவும்!!

________________________________________

சொற்கீரன்

வியாழன், 26 பிப்ரவரி, 2026

ஆலங்காட்டு தரிசனத்துக்கு...

27.02.2026.

பிடித்தவை 12ம.நே 
ஒரு தெய்வம்
வாகை மரத்தின் கீழ்
பதநீரும் நொங்கும் விற்கிறது.
புனிதமேரி தெருமூலையில் ஒன்றுக்கு
புதன் கிழமையில் மீன் வியாபாரம்.
பொது மருத்துவமனைப் பக்கம் ஒன்று
தோளில் சார்த்திய குளிர்ந்த பிள்ளையுடன்.
முடிதிருத்துகிற ஒரு தெய்வம்
செவ்வாய்க் கிழமை ஓய்வெடுத்துக் கொள்கிறது.
பித்துற்றுப் பேசி ஒன்று
பச்சைப்பழஞ்சேலையுடன் அலைகிறது.
நான்கு கால் தெய்வம் ஒன்று
நடைபாதையில் குட்டியுடன் படுத்தபடி.
தன்னைக் காட்டாது பறக்கும் தெய்வமோ
என் மீது சூடாக எச்சமிடுகிறது.
சிறு தெய்வமோ, பெருந்தெய்வமோ
கோவிலுக்கு வெளியேதான்
கும்பிடுகிறேன் அனைத்தையும்.
%
2013





_____________________________________________________-


 Vannadasan Sivasankaran S..........27/02/2026

பிடித்தவை

 ·

6ம.நே

 ·


நீண்ட காலம் 

படுக்கையில் இருந்தவர்

இன்றைக்கு அவரே எழுந்து 

முகம் கழுவிக் கொள்கிறார். 

அவருக்கு அவர் முகத்தைப் பிடித்திருக்கிறது.

ஈரம் வழியும் ஒடுங்கிய கன்னத்தை,

கண்களின் பள்ளத்தை,

நுனிச் சதை தளர்ந்த மூக்கு நுனியை

எலும்பு தட்டுப்படும் நாடியைப் பிடித்திருக்கிறது.

தண்ணீர் விழும் திருகு குழாயை

கைப்பிடியுள்ள இந்த ப்ளாஸ்டிக் கோப்பையை

அதிலிருந்து சரியும் தண்ணீரைப் பிடித்திருக்கிறது.

நெற்றியில் இருந்து விழும்

ஒரே ஒரு சொட்டை ஏந்துவதற்காக

அவர் அதிகபட்சம் நாக்கை 

நீட்டிக்கொண்டு இருக்கிறார்.


_______________________________________________‍‍


எங்கள் வகுப்பில் தமிழ் ஆசிரியர்

உருவகக்கதை சொல்லுவதில் வல்லவர்.

சுடுகாடு பற்றி

ஒரு கட்டுரை வரைக என்று

மாணவர்களுக்கு

அவர் சொன்னார்.

இந்த கனமான அச்சம் தரும்

தலைப்பு 

இவர்களால்

எப்படி பார்க்கப்படுகிறது என்று

அவர்க்கு அறிய ஆவல்.

மாணவர்களுடைய கட்டுரைகள்

கால் பக்கம் அரை பக்கம் கூட இல்லை.

சில வற்றில்

ஓரிரு வரிகள்

அல்லது வார்த்தைகள் மட்டுமே.

ஒரு கட்டுரை

இரண்டு மூன்று

தாள்களை நிரப்பி எழுதப்பட்டிருந்தது.

அவருக்கு

வியப்பு தாங்க வில்லை.

அதைப்படித்தார்.

"சுடுகாடு..."என்று துவங்கியிருந்தது.

அது அந்த ஆத்தங்கரையில் இருக்கிறது.

அதில் ஒரு அழகிய மரம்.

நாவல் மரம்.

அதன் இலைகள் சிலுக்கு மாதிரி

பளபளப்பில்

பச்சை பச்சையாய் வெட வெடப்பு சத்தத்தோடு

இருக்கும்.

பழங்கள்..

கருப்பு கருப்பாய்

இனிப்பு இனிப்பாய் இருக்கும்.

அது எப்படி?

மரத்தில் சமைக்கிறார்களா?

அது கூட‌

சூடாய் இருக்குமா?

ஆறிப்போய் இருக்குமா?

கீழே விழுந்ததை

பொறுக்கிப்பார்த்து தான்

புரிந்து கொள்ள முடியும்..

. . . . . . 

கட்டுரை தொடர்ந்து கொண்டே போனது.

ஆசிரியர் அந்தக்கட்டுரையை

அந்த மாணவனைக்கொண்டே 

வாசிக்கச்சொன்னார்.

கை தட்டி கை தட்டி

எல்லாரையும் பாராட்டச்சொன்னார்.

தமிழ் மொழி நாவு கொண்டு

உயர் தனி சிறப்பும் செம்மையும்

பெற்றது.

அந்த தமிழ் நாடு 

நாவலந்தீவு

எனும் பெயர் பெற்றது எப்படி 

என்று அவர்க்கு 

இன்று தான் விளங்கியது.

வண்ணதாசன் அவர்களே!

அந்த ஒரு சொட்டு நீருக்குள்

வாழ்க்கை கனத்தின் 

ஏழு கடல்களா?

_____________________________________

சொற்கீரன்



__________________________________________________










(3)


அது

கடைசிச்சொட்டா?

முதல் சொட்டா?

மகப்பேறு பார்த்தவள்

தன் பிஞ்சு மண்டைக்குழவியை

கழுவும்போதும்

அந்த ஒரு சொட்டு

அவர் வாய்க்குள் விழுந்து

பல அடையாறு ஆலமரங்களின்

விழுதுகளை

விட்டிறங்கி

எங்கெல்லாமோ நடந்து

ஏன்

அந்த சிந்துபூந்துறை ஆற்றையும் கூட‌

ருசி பார்த்து

சப்பு கொட்டிக்கொண்டு இருக்கலாம்.

அந்தத் துளியில்

இன்னும் பல ஏ ஐக்கள்

பூதங்கள் காட்டக் காத்திருக்கலாம்.

இருப்பினும்

கடைசியாக அவர் மூடப்படுவது கூட‌

அவருக்கு பிடித்துப்போன காட்சி தான்.

ஆலங்காட்டு தரிசனத்துக்கு

எல்லோரும் தான் வந்திருக்கிறார்கள்

அந்த கூத்தனும் கூடத்தான்.

__________________________________________

சொற்கீரன்.





அந்த குமிழி

 



(2)


அந்த குமிழி உடையுமுன்

உன் வானவில் சிப்பங்களை

அதில் செருக்கிக்கொள்.

கற்பனை ஒளி

கரு தரிக்குமுன்

உன் வானச் சிலேட்டை

மடியில் வைத்துக்கொள்.

குச்சி நுனியும் விரல் நுனியும்

என்ன பேசிக்கொள்கின்றன‌

என்பதை நீ

உற்றுக்கேட்பதிலிருந்து

உன் கனவு மண்டலங்கள்

உனக்கு குடை பிடிக்க‌

வருகின்றன.

______________________________________

சொற்கீரன்


நூலாம்படைகள்

நூலாம்படைகள்

________________________________


(!)



அங்கும் இல்லை.

இங்கும் இல்லை.

எங்கும் இல்லை.

நான்.

எதற்கு இந்த 

தன்மை

முன்னிலை படர்க்கைகள்?

என்னைக்காட்டிக்கொள்ள‌

ஏதாவது

பேசவேண்டும்

எழுத வேண்டும்

பாட வேண்டும்

நடிக்க வேண்டும்.

வழியில் ஒரு

செத்தக்குச்சியைத் தொட்டால் கூட‌

சுருண்டுகொள்ளும்

வளையல் பூச்சிகள்

எந்த வானவில்லை

வளைத்து முறிக்க இங்கே

காத்திருக்கின்றன.

_______________________________________‍

சொற்கீரன்


(2)


மனுஷ்யபுத்ரன் அவர்கள்

தன்னை

சுஜாதா என்ற‌

எலக்ட்ரானிக் இலக்கிய‌

ஆலமரமே வந்து

நீரூற்றி வார்த்தெடுத்ததை

குறிப்பிட்டிருந்தது

ஒரு வரலாற்று நெகிழ்ச்சியின் 

உயிர்ச்சித்திரம்.

சொற்களை கூர் தீட்டும்

சிக்கி முக்கிக்கல் தான்

கவிதை.

எழுத்துக்களின் மாத்து பற்றி

உரைக்கும்

கட்டளைக்கல் கூட‌

கவிதை தான்.

கவிதை படித்தாலும்

கவிதை எழுதினாலும்

தீப்பற்றிக்கொள்ளும் 

சிந்தனைத் தீற்றுகள் கூட‌

முகவரியற்ற மூலைகளாய்

விழியுறுத்தி நோக்கித்தான்

கிடக்கின்றன.

_____________________________________

சொற்கீரன்










புதன், 25 பிப்ரவரி, 2026

போதும்

 



பொருனைப் புத்தகவிழா

_________________________________________


மனுஷ்ய புத்திரன்கள்

சாமராஜ்கள்

வண்ணதாசன்கள்

பாமணிகள்

என்ன பட்டியலை நீட்டிக்கொண்டு

போகிறீர்கள்

இன்னும் தொப்பில் முகமது மீரான்கள்

......

இவையும் காகிதங்கள் தான்

கரையான்களை விரட்டிவிடும்

அக்கினிக்கண்டங்கள்.

நினைவின் சிந்தனையின்

பிழம்புகளை சோழிகளாக்கி

பல்லாங்குழி விளையாடிக்

காட்டிக்கொண்டிருப்பவர்கள்.

போதும்

அந்த செவ்வாய்க்கோளின்

மண்ணை நோண்டிக்கொண்டிருந்தது..

மனிதா..

இப்படிச் சிந்தனைக்குழிகளில்

விழுந்து விழுந்து

புதுப்புது

பிரபஞ்சங்களின்

சொக்கப்பனைகளாய்

திமிறி எழுந்து வா..

இவர்களைப்போல.

_____________________________________

சொற்கீரன்

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

கள்ளிச்செடி

 


Vannadasan Sivasankaran S

பிடித்தவை

 ·

7ம.நே

 ·

சீட்டுக்கட்டின் வழவழப்பில்

ஒரு மாயமிருந்தது.

ஐம்பத்திரண்டு என்கிற அதன்

எண்ணிக்கையிலும் ஏதோ ஒன்று.

தலைகீழாகவும் நேராகவும் நிற்கிற

ராஜா ராணிகளின்

இதுவரை பாராத சாயல்கள்

அரசசபைக்கும் அந்தப்புரத்திற்கும்

ரகசியமாக அழைத்தன.

கெட்டபுத்தகங்களை வாசிக்கத் தரும்

பதின்வயது சினேகிதன் போல

ஜாக்கி இருந்தான்.

யாரிடமும் புகையிலை வாங்கிப்போட்டு

எப்போதும் கதை சொல்லும்

கிழவி போல பிரியமானது ஜோக்கர்.

ஆடுகிறவர்கள் நேர்த்தியில்லாமல்

அவரவர் சௌகரியப்படி அமர்ந்து

அவரவர்க்குத் தோன்றுவதைப் பேசுவது

பிடித்திருந்தது நிரம்ப.

ஜெயித்தவர்களை விட, தோற்றவர்கள்

விளையாட்டைத் தொடரும்படி  

இருந்த ஒரு வினோத அழைப்பு

சிக்கல் நூல்கண்டு போல் சவாலுடன்

அவிழ்க்கத் தூண்டியது.

பக்கத்திலிருந்த என்னிடம் கஜேந்திர மாமா

‘சீட்டைப் பார்த்துக்க மாப்ளே” என்று

சிறு நீர் கழிக்கப் போன சமயம்

சும்மாதான் கையில் எடுத்தேன்.

சூதாடியாவதற்குப் போதுமானதாக

இருந்தது அந்தச்

சும்மா என்கிற சின்னஞ் சிறு நொடி.


______________________________________________‍‍‍


இந்த பாரத வர்ஷம் இப்டி

கள்ளிச்செடி மண்டி

"சீட்டா" செதரிக்கெடக்கதுக்கு

மூல அரிப்பே

மாப்ளெ..இரு ஒரு கை பாத்துர்வம்ணு

சொல்ற தெனாவெட்டு தான்.

எத்தன வாட்டி

அந்த மெசின அமுக்கியும்

இன்னும் நொரை தள்ளி தானே 

கெடக்கோம்.

ஆனாலும் வண்ணதாசன் அவர்களே

அந்த சீட்டுக்கட்டு பொம்மைகள வச்சு

ஒரு "கேரிகேச்சர்"

பண்ணீருக்கீங்ளே..

புல்லரிக்குது.

_________________________________________

சொற்கீரன்

"வெருள்"னு...

 


Vannadasan Sivasankaran S


6ம.நே

 ·

போர்வையை உதறி எறிந்து

எழுந்து உட்கார்ந்தவள் சொன்னாள்

' குதிரை கனைக்கிற சத்தம்'

'அது ஒரு பழுப்பு நிறக் குதிரை'

'பிடரி மயிரைக் கச்சிதமாகக் கத்தரித்திருக்கிறார்கள்'

'இல்லை, நிஜக்குதிரை இல்லை'

'தைல வண்ண வாடை அடிக்கிறது.

யாரோ கனைக்கிற குதிரையை வரைகிறார்கள்'

சொல்லச் சொல்ல நான் பேசாமல் இருந்தேன்.

'வாசலில் ஒரு குதிரை லாடத்தைத் தொங்க விட வேண்டும்'

சரி சரி என்று தட்டிக்கொடுத்து அவளைத் தூங்கவைத்தேன்.

என் உள்ளங்கையில்  இருந்து பச்சை வாசம் அடிக்கிறது.

அது அப்போதுதான் மேயப்பட்ட புல்லின் உடையது.

%

2021


சர்வம் ஹயக்ரீவம் ..

மந்திரம் சொல்லுங்கள்.

உள்ளங்கை பச்சைப்புல் நாத்தம்

போய்விடும்.

இப்படி "ப்ரமை'தட்டிப்போய் தான்

வேதம்லாம் சொல்லியிருக்கோம்.

அந்த "ப்ரம்மை"யைத்தான் 

இன்னும் பிச்சு பிச்சு தின்னுகிட்டிருக்கோம்..

மலையாளத்துல‌

"ப்ராந்து"ம்பாங்க.

தமிழ்ழ பித்தம்பாங்க.

தூய தமிழ்ழ "வெருள்"னு

பகுதி இலக்கணம் சொல்லுவாங்க.

குருதை மட்டுமில்ல.

கழுதங்கிற "மிலேச்ச வர்ண'த்துக்கும்

ஸ்லோகஞ்சொல்லி வச்சிருக்காங்க.

சரி போகட்டும்.

ஹேலுசினேஷன இப்டி

ஆயிரம் இதழ் தாமரையாய்

பிச்சு ஒதரீர்க்கீங்க்ளே...

வொண்டர்ஃபுல்

வண்ணதாசன் அவர்களே.

__________________________________________

சொற்கீரன்

25.02.26

இரைச்சல்காடுகளின் மன்னன்

 


நான் வாழ்ந்து காட்டப்போகிறேன் 

என 

ஒருவன் நடிக்கக்கிளம்பினான்.

அவன் அப்படியே இருந்தான்.

அவனது கிரீன் ரூம் மட்டுமே

வந்து

ஆடியது பாடியது

உண்ர்ச்சி கொப்பளித்தது.

நரம்புகளை முறுக்கேற்றியது.

அவன் ஜிகினாக்கள் களையப்படும் முன்

அவன் ஒன்றைத்தேடினான்.

எங்கே அது?

அது இல்லாமல் அவன்

டாய்லட் பேப்பர்கள் கூட‌

வசனம் பேசாதே.

எங்கே அது?

இப்போது என்ன செய்ய?

எங்கோ வேகமாய்ப்போய்

அந்த குப்பைத்தொட்டியைக்கிளறி

அள்ளிக்கொண்டு வந்தான்.

ஸ்க்ரிப்ட் பேப்பர் கூளங்கள்.

எப்போ பேசவேண்டும்

எதை பேச வேண்டும்

என்ன மொழி?

தாய் மொழியாவது

தகப்பன் மொழியாவது

பாடி லேங்குவேஜ் அது இது

என்று

இயக்குநர்

சொன்னது மட்டுமே 

அரசல் புரசலாய் தெரியும்.

இப்போதைய‌

சினிமா எடுப்பது யார்?

இயக்குநர் யார்?

தெரியவில்லை.

உளறல் குழறல் மட்டுமே

அந்த ஸ்க்ரிப்ட்.

ஊமைகளுக்காக

ஒரு ஊமைப்படம் காட்ட வந்த‌

இரைச்சல்காடுகளின் மன்னன்

இப்போது அவன்!

__________________________________________

சொற்கீரன்


திங்கள், 23 பிப்ரவரி, 2026

அல்ஜீப்ரா

 



அவன் 

அந்த துணிச்சுருணையில்

வந்து விழுந்ததை

அவனது "குவா குவா"

பறை சாற்றியது.

அதற்குள் 

ஒரு சங்கு சேகண்டி ஒலிப்பது

கேட்டால் 

அதற்கு அவன் பொறுப்பல்ல.

நவீன செட் தியரி கணக்கில்

அந்த "காம்பிளிமெண்டும்"

கூடவே ஒட்டியிருக்கும்.

கோலி விளையாடி

பம்பரம் விட்டு

புத்தகங்கள் நெட்டுரு தட்டி

கம்பியூட்டர் குடலுக்குள் எல்லாமிருந்து

பூலியன் அல்ஜீப்ராவை

பிடுங்கி பிடுங்கி அந்த 

நரசிம்மம் போல் மேல் எல்லாம்

பூணூல் சுற்றிக்கொண்டு

டாலர்களை அவன் மூட்டை மூட்டையாக‌

குவிக்கும் போது கூட‌

மின்சார தகனமேடை

அவன் முதுகைச்சொரிந்து

நினைவூட்டியது கூட‌

துலிப் மலர்க்கொத்துகள் தான்.

அது சரி.

காதல் என்று தங்கமேகக்குழம்புகள்

அவனுக்கு 

அவன் ஹார்மோன்களின் முறுக்கியல்களை

ஏ ஐ சொதப்பல்களாக‌

ஷவர்களாய்

நீராடத்தரும்போதும்

அவன் சிதை முழுவதுமாய்

புகை மூட்டத்தில் முற்றுப்புள்ளி இடும்போதும்

அவனுக்கு எல்லாம் புரிந்தது.

அவன் ட்யூவாலிடி கேடகரியாய்

ஒரு ஹோமோடாபியில்

ஆயிரம் ஆயிரம் பிரபஞ்சங்கள்

தாண்டிய ஒரு சன்னலில்

முகம் நீட்டியிருந்தான் என்று.

______________________________________________

சொற்கீரன்

"பிக்காஸோ"க்குழப்பங்கள்!

 

தனிப்பட்டவன் டைரின்னு

அவன் ஒன்றில் எழுத உட்கார்ந்தான்.

மேலே மாமரத்து நிழல்.

எங்கோ இருந்து காக்கைகளின்

ஒலிக்கீறல்கள்.

இருந்து விட்டுப் போகட்டும்

ஊமை சாட்சிகள் தானே.

நிறைய எழுதினான் 

வரிந்து வரிந்து எழுதினான்.

உணர்ச்சிப்பிழியல்களை

கல்யாண வீட்டில் தவசுப்பிள்ளை

ஆவி பறக்கும் சோற்றை

கோணிச்சாக்கில் வடிகட்டுவது போல்

பிழிந்து தீர்த்தான்.

அப்புறமாய் படிக்கலாம்

என்று

டப்பென்று மூடிக்கொண்டு வந்து விட்டான்.

ஆற அமர அதை படிக்கலாம்

என்று..

என்ன இது?

நெய்வண்ண ஓவியம் போல்

ஒரு பிரபஞ்சக்குழம்பு?

அவன் வரிகளுக்கு மேல்

அப்போது தான் விழுந்த‌

காக்காய் எச்சம்.

டப்பென்று மூடியதில்

அர்த்தம் இனிமேல் தான் 

புரிந்து கொண்டு பார்க்கவேண்டும்

என்று

காக்கை வரைந்து கொடுத்த‌

அவனது "பிக்காஸோ"க்குழப்பங்கள்!

_________________________________________

சொற்கீரன்

இரண்டிரண்டு உலகங்கள்'.

 24 02 2026

ஸ்டோரிகள்

நீ என்னவேணாலும் எழுது.
எறும்புகள் வாசிக்குதுன்னு சொல்லு.
தூரத்து சன்னல்கம்பிகள்
தங்கக்குழம்பாய் உருகி வழிந்து
ரோடு போட வ‌ச்சிருக்கிற‌
ஜல்லிப்பரல்களில்
சவ்வூடு பரவுதுன்னு
சட்டையக் கழட்டிப்பாரு.
எழுத்து வார்ப்புக்குள்ளே எல்லாம்
யாரோ இருமுறாங்கன்னு
ஸ்டெத் வச்சுக்கேளு.
முத்த சலங்கைகளைக் கோத்து
வீசுகின்ற‌
நிலாப்பிஞ்சுகள்
நெரடிக்கிட்டே இருக்குன்னு
தேடு...தேடு..
இந்த தேட்டையை எல்லாம்
காகிதக்கசக்கல்களில்
மை ரத்தம் பாய்ச்சி
நீலவானக்கப்பில்
ஊத்தி ஊத்தி ஆத்தி ஆத்திக்
குடி.
___________________________________
சொற்கீரன்
பிடித்தவை 5ம.நே 
.அவனுக்கு ரொம்ப ஆச்சர்யம்.
அம்மாவின் நூல் கண்டு டப்பாவில்
இரண்டு கண்ணாடி கோலிகள்.
ஒன்று நீலம், இன்னொன்று பச்சையாக.
' அம்மா நீ என்ன கோலி விளையாடுவாயா,?'
அம்மாவிடம் கேட்டான்.
அம்மா சொன்னாள்
' எனக்குக் கோலி பிடிக்கும் . உலகம் போல உருண்டை அல்லவா அது'
'அப்புறம் ஏன் இரண்டு?'
அவன் அம்மாவின் முகத்தைப் பார்த்தான்.
அம்மா அவன் சிகையைக் கோதினாள்.
கண்ணீர் கசியும் குரலில் சொன்னாள்
' உனக்குப் புரியாது.
எல்லா அம்மாக்களுக்கும் உண்டு்
இரண்டிரண்டு உலகங்கள்'.

____________________________________________________________________________


எட்டாங்கிளாஸ் வகுப்பில் ஒளிமுறிவு பற்றி படத்துடன் விளக்கினார் சையன்ஸ் சார்வாள். எனக்கு ஆச்சரியம். தினம் தினம் எங்கள் வீட்டுச் சன்னல் நிழல்களில் அந்த சூரியன் முறுக்கை நொறுக்கிப்போட்டு நொறுக்கிப்போட்டு காப்பிக்குடிக்குதா என்ன? மில்லியன் டிகிரி வெப்பக்குழம்பில் ஆவி பறக்க ஆவி பறக்க‌ மண்டி விட்டு என்னத்தை இங்கு எழுதுகிறது? அம்மாவின் கடுகு டப்பாவுக்குள் அவள் தாளிக்காத சொப்பனங்கள் என்றா? ______________________________________ சொற்கீரன்

அப்படித்தான் கல்லிடைக்குறிச்சியிலிருந்து லீவுக்கு பெரியம்மா வீட்டுக்கு கிளம்பும் ரயில் கோரையாத்துப் பாலம் தாண்டி சேர்மாதேவி சலங்கை கத்திப்பாலமும் தாண்டி பாலஸ் டி வேல்ஸ் டாக்கீஸ் ரெயில் கிராஸ்ஸிங்கும் தாண்டி அந்த சிந்துபூந்துறை தெரு முக்கில் செய்யது பீடி கம்பெனியை வந்து முட்டும். லீவு...ஜாலி தான். ______________________________________
சொற்கீரன்



பிடித்தவை 5ம.நே 
அடையாளமாக
இப்படிச் சொல்வோம்
'எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு புங்கை மரமும் கொன்றை மரமும் இருக்கும்'.
இப்படிக் கேட்டார் ஒருவர்.
'ஒரு புங்கை மரத்துக்கும் கொன்றை மரத்துக்கும் பக்கத்தில் இருக்கிற வீடுதானே உங்களுடையது?'
சரி என்பது
சரியின் பக்கத்தில் இருப்பது .





ஸ்டோரிகள்

Feed posts

பிடித்தவை 6ம.நே 
சீனி சேட் லாரி ஆபீஸ் முன்னால் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார்.
வியர்த்துச் சட்டை உடம்போடு ஒட்டியிருந்தது.மூன்று பித்தான்கள் திறந்த மார்பு. பேசியபடியே இடக்கை மடக்கிக் கழுத்துப்பட்டியை முதுகுப் பக்கம் இழுத்துவிட்டார்.பேச்சைச் சற்று
ஒரு நொடி நிறுத்தி உப்பின கன்னத்து முகத்தைத் தணித்து நெஞ்சில் காற்றை ஆழமாய் ஊதினார். மீண்டும் பேச்சைத் துவங்கும் போதும் சிரிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை.
இது ஒரு சாதாரணக் காட்சிதான். இது ஒரு சாதாரணக் காட்சி இல்லை என்று தானே இவ்வளவு காலம் அதை மனம் ஞாபகம் வைத்திருக்கிறது.


__________________________________________________________________-


தாம்புரவர்ணி ஆத்துலே முங்கி முங்கிக் குளித்து கள்ளக்குளியில கூட வெரால் பாஞ்சு பாஞ்சு பொறுக்குன கூழாங்கல்லுகள எங்க வீட்டு நூறுவயசு கல்லுத்தூணு சுண்ணாம்புச்சாந்து சாட்சியாய் தாசால்ல பரத்தி வச்சுருக்கேன் ஒரு ஓரத்துல. அதப்பத்தி யாருக்கும் கவனமில்ல. அங்க தான் கெடக்கு. வயசுகளுக்கு கூன் விழுந்து நரை பழுத்துப்போச்சு. எதிரே உள்ள எங்க வீட்டு ராட்சச புளியமரம் மட்டும் எங்கோ வான உச்சிக்குப்போயி புளியம்பூவையும் தளிர்பிஞ்சுவையும் போட்டு நக்கி நக்கி அந்த ஊதா வானங்கூட‌ புளிச்சுக்கெடக்கு. அது என்ன? உரக்கெடங்கு கணக்கா நாத்தம்புடிச்சுக் கெடக்குற‌ நெனவுக்குள்ள பூரா மாணிக்கச்சோழிக குலுங்கிட்டு கெடக்கு. போரும் போரும்.. மொகரக்கட்டைய பாரு. இதுக்கெல்லாமா ஒனக்கு அக்காடமி அவார்டு கேக்குது! __________________________________ சொற்கீரன்.










அப்படித்தான். அடையாளப்படுத்துனாங்க‌ அனுமார் சாமியை எங்களுக்கு. அத கும்புட்டோம்னா.. நமக்கு எதிரியே இருக்கமாட்டாங்களாம். ஆனா துடியான சாமியாம். கொஞ்சம் பிசகிட்டோம்னாலும் ரத்தம் கக்கித் தான் சாவணுமாம். இப்ப என்ன பண்ணுறதுங்க? அதுக்கும் சேத்தே கும்புட்டுருங்க! _____________________________________ சொற்கீரன்



கோடி கோடி ஆண்டுகளாய்
இதே முறுக்கல் தான்.
இதே பிழியல் தான்.
தோன்றியதை எல்லாம்
சொல்கின்றேன்.
இரைச்சல் கொட்டுகளுடன்
தினம் தினமும்.
பூரான்கள் நெளிந்து ஓடுகின்றன.
அதுவும் கோடி கோடிகளாய்.
பிரகடனங்கள் ஏதுமின்றி
__________________________________________
சொற்கீரன்