வெள்ளி, 27 மார்ச், 2026

ஞானபீடமும் அஞ்ஞானக்காடுகளும்


ஞானபீடமும் அஞ்ஞானக்காடுகளும்
____________________________________________
முகநூலில் ஒரு நண்பர் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு ஞானபீடம் அளித்தது சரியல்ல என்று அவரும் ஒரு அஞ்ஞானக்காட்டில் திக்கு தெரியாத மனநிலையில் இருப்பது போன்று தான் எழுதியிருந்தார்.அது பற்றிய கருத்து களே இவை.
இவரும் ஒரு வகையில் புளிச்ச மாவுக்கார எழுத்தாளர் ஜெயமோகனை ஒட்டித்தான் செல்கிறார்.கவிதை எழுதுபவர்கள் எல்லாருமே தன் பேனாமுனையில் ஞான பீடங்களையோ நோபல் பரிசுகளையோ கட்டி உச்சியில் வைத்துக்கொண்டு அந்த மன நோயால் துன்புறுபுவர்கள் அல்ல. ஆனாலும் பெரும்பாலும் அதுவும் ஒரு பேய்நிழலாய் அவர்கள் தோள்களில் உட்கார்ந்து கொண்டிருக்கலாம் என்பதற்கும் அவரே ஒரு சான்று.இல்லை யென்றால் அடுத்த இலைக்கு பாயசம் கேட்பது போல் அந்த மற்றக்கவிஞர்களையும் தன் கட்சிக்கு இழுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.இந்த உலகப்புகழ் பெற்ற பரிசுகளையும் வேண்டாம் அதை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள் என்று சீற்றம் கொண்ட எழுத்தாளர்களும் இருக்கிறார்களே! அவர்களுக்கு உங்களிடம் என்ன விருது வைத்திருக்கிறீர்கள். கவிஞர் வைரமுத்துவை ஜெயமோகன் போல் புளிச்ச ஏப்பத்துடன் அணுகாமல் அதையும் விட கொச்சையாக நீங்கள் அணுகியிருக்கிறீர்கள்.மனிதனுக்குள் இயற்கையாய் கொழுந்து விட்டு எரியும் பொறாமைத்தீ உங்களிடம் அதிகமாகவே எரிந்தது தான் நீங்கள் கங்கை அமரன் மற்றும் பல கவிஞர்களை உங்கள் தோள் மேல் தூக்கிக்கொண்டது.கவிஞன் என்று பேனா தூக்கியவன் எந்த "மண்டபத்திலே இருந்து பாட்டு எழுதிக்கொண்டிருப்பவனாக இருந்தாலும்" அவனுக்கும் ஒரு நோபல் பரிசை அவனுக்கு முண்டாசு கட்டலாம் தான்.ஆனாலும் இந்த பேய்த்தீயால் தன்னையே எரித்துக்கொண்டு சாம்பாலாக புலம்பும் உங்களைப்போன்றவர்கள் தன்னைப்பற்றி சுய விமர்சனமாக ஒரு கவிதை எழுதியும் அதை வாசித்துக்கொண்டிருக்கலாம்.நீங்கள் எழுதியதைப்பார்த்தால் வைரமுத்து அவர்கள் உங்களிடம் கருத்து கேட்டுக்கொண்டு தான் பேனாவையே தொடவேண்டும் என்பது போல் அல்லவா இருக்கிறாது.கவிஞர்களுக்கு அவர்களது எழுத்துக்கர்வமே அவர்களது வெண்கொற்றக்குடை என்பதில் எனக்கும்
எந்த முரண்பாடு இல்லை. "ரோஜா" திரைப்படத்தில் அவர் எழுதிய "சின்ன சின்ன ஆசை..."என்ற ஒரு கவிதைப்பாட்டு போதும்.நோபல் பரிசே கொடுக்கலாம். இருப்பினும் இப்படி நீங்கள் எழுதுவது ஒரு கவிதை இயலுக்கு முரண்பட்ட மனவியல் ஆகும்.உங்கள் எழுத்துகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________________இ பரமசிவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக