அருமை..அருமைமிகு ரமேஷ் கண்ணன்.
சிமினி விளக்கு தான்.
அது எங்கள் ஊர்
தாமிரவருணி வாய்க்கால்
குமிழிகளோடு
"நடுமையத்தில்" நின்று கொண்டு
உயரத்தில் நீலமும் சிவப்புமாய்
சிறகடித்து "டொபுக்கென்று"நீருக்குள் விழுமே
அப்படியொரு அழகிய திகிலை எதிர்பார்த்து
எங்கள் வீட்டில்
வட்டாரமாய் அமர்ந்து சாப்பிடுவது
நினைவுக்கு வந்தது.
ஒரு சிறிய "சத்ய ஜித் ரேயின்" குறும்படம்
ஒன்று பார்த்த சிலிர்ப்பு உங்கள் வரிகளில்.
___________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக