திரு வண்ணதாசன் அவர்களின் கவிதை
30/03/2026 முகநூல்
"என் ஆமையைக்காணோம்.."
எவ்வளவு சுகமான வாகனம்
உங்கள் கவிதை.
அது என்ன
பேனா மூடியைத் திறந்தாலே
"கூர்மாவதாரம்" தான்?
நல்லவேளை
திருமாலின்
நாபிக்கொடி நாற்றங்களெல்லாம் இல்லை.
இருப்பினும்
அந்த பிஞ்சுவின்
உதடு பிதுக்கலில்
ஏழு சமுத்திரங்களின் ஏக்கம்
பீச்சியடிக்கிறது.
நான் நினைக்கிறேன்
உங்கள் கனவு இடுக்குகளில்
ஃப்ராய்டுகள்
அசை போட்டுக்கொண்டிருக்கலாம்.
கடவுள்
தன் படைப்பின் அழகைக்கண்டு
சப்புக்கொட்டுவதற்கு தான்
இங்கே
கவிஞர்களை அனுப்பியிருக்கிறார்
போலும்!
______________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக