வண்ணதாசன் கவிதை (முகநூல் 14.03.2026)
_______________________________________________________
" மன்னியுங்கள். உங்கள் உறவினர் பிடிவாதமாக இறந்து போயிருக்கிறார்"
வண்ணதாசன் அவர்களே
இப்படியொரு தலைப்பை
உங்கள் தூரிகையின் மயிர்ச்சிப்பம்
இறுதியில் இழுவித்தந்ததில்
மின்னல் உயிர்ப்பு அல்லவா
இழையாடி நிற்கிறது.
அந்த ஓவியன் தவிப்பு.
நடு நிசி நடை.
இன்னும்
அந்த நின்றே போய்விட்ட
இதயப்பொந்துக்குள்ளிருந்து
உயிர்த்தெழுந்த ஒலிக்கீறலாய்
விம்மிப்புடைத்த ஒரு கிளிமொழி இது!
___________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக