என் மகளுக்கு இன்று பிறந்தநாள்.
______________________________________________
என் அருமை மகளே!
உன் இல்லம் நன்கு செழிப்புறக!
உன் குடும்பம் நன்கு
எல்லா நலங்களும் வளங்களும்
நிறைந்து சுடர்க!
மனிதர்கள்
மனம் இருப்பதாலேயே
மனிதர்கள் எனப்படுகிறார்கள்.
அது எப்போது
நிறைந்து இருக்கும்
எப்போது
இல்லாமல் இருக்கும்
என்பதுவே
மனிதன் என்பதன் அர்த்தத்தை
புலப்படுத்தும்.
நானும் நிறைந்த மனத்துடனேயே
உன்னை வாழ்த்துகிறேன்.
நீயும் நிறைந்த மனத்துடனேயே
உன் அன்புப்புன்முறுவலுடன்
எங்களை நோக்குகிறாய்
என்பதையும் நான் அறிகின்றேன்.
உனக்கு
என் அன்பு வாழ்த்துக்கள்.
ஆம்
உங்கள் யாவருக்கும்
எங்கள்
அன்பு வாழ்த்துக்கள்.
___________________________________
அன்புடன்
வாழ்த்தும் உள்ளங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக