குன்னக்குடி?
__________________________________________
(குன்னக்குடி எனும் இசைப்பிரளயம்)
குன்னக்குடியா?
அந்த பிரபஞ்சத்தை
பிக் பேங்க் எனும் இசையை
வயலினில் "ஒலி பெயர்" என்றால்
உடனே மொழி பெயர்த்து விடும்.
அப்போ
இந்த பிரபஞ்சத்துக்கும்
விழி பிதுங்கிவிடும்
பெரு வெடிப்பின் வியப்பில்!
இசையை
சேட்டை செய்து கொண்டே
அமிர்த எள்ளுருண்டை
உருட்டிப்பிசைந்து தருவார்.
அவர் வயலின் ஆயிரம் மொழி பேசும்.
அந்த
"மருத மலையை" நான் கேட்டபோது
ஆகாயத்தில்
அவர் பறக்க விட்ட
அந்த ஆயிரத்தொரு இரவு "மந்திரக்கம்பளத்தில்"
சுருண்டு நெளிந்து
சுக்கல் சுக்கலாக ஒரு
தேன் மிட்டாய்க்குள் நொறுங்கிக்கிடந்தேன்.
அதை விடுங்கள்.
"காவேரியை"
அவரது வயலின் நரம்பு வில்லில்
தலைக்காவிரியிலிருந்து
கொப்பளித்தார் பாருங்கள்..
அய்யோ..!
அது கும்மாணத்தில் குமிழியடிக்கும் நீர்ப்பிழம்புவரை
ராகத்தில் சடைபின்னிய
அனகோண்டாவாய் ஊர்ந்து வந்தது போல்
நான் ஆவியாகிப்போனேன்.
குன்னக்குடி ...குன்றக்குடி
எனக்கும் பிரமைதட்டித்தான் போனது.
ஒரு கணம் மேடையில் தமிழ்ச்சொற்பொழிவாய்
அந்த காவித்தலைப்பாகையில்
மின்னல் இடும்.
மறு கணம் அடிகளார் அற்புதமாய்
"பிடிலுக்குள்" செந்தமிழை
பிருகாக்களில்
பிரித்து மேய்ந்து கொண்டிருப்பார்.
ரமேஷ் கண்ணன் அவர்களே
குன்னக்குடியின் டோபாலஜியில்
சங்கீதம் இசைத்தமிழை
நயாகராவாய் ஒலிப்பிரளயம் ஒன்றை
அரங்கேற்றிக்கொண்டே இருக்கிறது.
_______________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக