திங்கள், 23 மார்ச், 2026

பொன்சுடர்த்தமிழே

 


வாயில் 

நுழைய வில்லை உன்

வண்ணத்திருப்பெயர்.

ஆயினும்

ஆயிரம் வாயில் 

திறக்கும் உன் தமிழ்


பிஞ்சுத்தமிழே

பிள்ளைத்தமிழே

நீயே எங்கள்

ஊற்றும் காற்றும்!




பொய்யா விளக்கே

பொன்சுடர்த்தமிழே

உள்ளும் புறமும்

ஒளியா ஒளியே!

உன் ஐஞ்சீர் விரலே

எம் ஐம்பெரும்காப்பியம்..உன்

அன்பும் அறமும்

அறிவும் திறனும்

புன்னகை ஒளியும்

உலகம் ஆளும்.

விண்ணும் மண்ணும்

உன் கணிப்பொறி ஆளும்.

நீடு ஊழி நீடு யுகங்கள்

வாழ்க வாழ்க நீ

வளமுடன் வாழ்க!

அன்புடன் அன்புடன்

வாழ்த்திடுகின்றோம்

உன் ஆச்சி தாத்தா

கஸ்தூரி பரமசிவன்

__________________________________

கற்பகநகர் மதுரை_7


மழலைச்செல்வத்துக்கு

ஒரு வாழ்த்து.

வாயில் 

நுழைய வில்லை உன்

வண்ணத்திருப்பெயர்.

ஆயினும்

ஆயிரம் வாயில் 

திறக்கும் உன் தமிழ்.

புரியா சொல் தானே

மழலை!

உன் மழலைப்பெயரே

எங்கள் மனம் நிறைந்த‌

பெயர்.

அதுவும் இனிக்கும் 

அதுவே மணக்கும்

அதுவே

நனி சிறக்க

வாழ்த்துக்கள் 

எங்கள் வாழ்த்துக்கள்.




மழலைச்செல்வத்துக்கு

ஒரு வாழ்த்து.


வாய் நுழையவில்லை

வண்ணத்திருப்பெயர்!

ஆயினும்

பிஞ்சுத்தமிழே

பிள்ளைத்தமிழே

நீயே எங்கள்

ஊற்றும் காற்றும்!

பொய்யா விளக்கே

பொன்சுடர்த்தமிழே

உள்ளும் புறமும்

ஒளியா ஒளியே!

உன் ஐஞ்சீர் விரலே

எம் ஐம்பெரும்காப்பியம்..உன்

எண்ணும் எழுத்தும்

உலகம் ஆளும்.

விண்ணும் மண்ணும்

உன் கணிப்பொறி ஆளும்.

வாழ்க வாழ்க நீ

நீடூழி வாழ்க.


வளமுடன் வாழ்க!

அன்புடன் அன்புடன்

வாழ்த்திடுகின்றோம்

உன் ஆச்சி தாத்தா

கஸ்தூரி பரமசிவன்

__________________________________

கற்பகநகர் மதுரை_7

ஆச்சி தாத்தா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக