வியாழன், 29 ஜூலை, 2021

மூன்று கவிதைகள்

 மூன்று கவிதைகள்

_______________________________ருத்ரா

29.07.2021



ஒரு டம்ளர் தண்ணீரில் 

எங்கள் தாகம் தீர்க்கும் உனக்கா

இத்தனை கார்களையும்  வீடுகளையும்

நொறுக்கிவிடும் தாகம்

ஏற்பட்டது?



சீனாவில் வெள்ளம்.

____________________________


புல்லுக்கும் புழுவுக்கும்

எவ்வளவு சுதந்திரம் இங்கு!

ஓட்டுக்கேட்கவும்

ஒட்டுக்கேட்கவும்

இங்கு யாருமில்லை!



சுதந்திரம் 

_____________________________


கொடி ஏற்றி இறக்கி

கயிறும் கம்பமும் 

தேய்ந்தது மட்டுமே மிச்சம்.



ஆடுவோமே பள்ளு பாடுவோமே

__________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக