வியாழன், 1 ஜூலை, 2021

யார் அவன்?

 


யார் அவன்?

______________________________ருத்ரா



யாரை இங்கே இப்படி 

நட்டு வைத்திருக்கிறார்கள்?

நீல வானம் முழுவதையும்

விழுங்கித் தீர்த்துவிடும் 

தீர்மானம்

அந்த ஒவ்வொரு தோகையிலும்

ஒரு கலித்தொகை போல்

ஒலிக்கின்றது கேட்கின்றது.

அதன் 

தரவு இசையும் தாழ் இசையும்

ஏதோ ஒரு மௌனக்குழம்பில்

குறு குறுப்பது

எல்லா இதயங்களிலும்

எதிரொலிக்கிறது.

யார் அவன்? 

நல்நன் எனும் நன்னன்?

சிந்து வரியில் ஒலிக்கிறான் 

அவன்.

யாதும் ஒலியே யாதும் மொழியே

சிதறிடும் சொற்களில்

உதறிடும் பொருளில்

உயிர்ப்பது எதுவோ

அதுவே இங்கு

உலகப் பொது மொழி.

"மனத்துக்கண் மாசிலன் ஆதல்

அனைத்து அறன்."


____________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக