ஞாயிறு, 11 ஜூலை, 2021

சொல்

 சொல்

__________________________________

ருத்ரா


அது

எறிபவனைப் பொறுத்தது.

நட்போடு ஒரு மனிதன் 

நீட்டுவது பூ.

பகைக்க மட்டுமே பார்ப்பவன்

எறிவது கல்.

தமிழை வாழ்த்தி

"தமிழ்ப்பகைவர்கள் எங்கோ மறைந்தார்"

என்று 

சங்கு முழக்கியவர்

இன்று உணர்ந்திருப்பார்

ஏமாந்து விட்டேன் என்று.

தமிழனுக்கு

தமிழே ஒவ்வாமை ஆனதால்

ஆங்கிலமும்

சமஸ்கிருதமும் கலந்த

களிம்பு கொண்டு பூசினால் தான்

அரிப்பே நீங்குகிறதாம்.

ஒரு தமிழ் அரும்பு

தொலைக்காட்சியில்

தலை நீட்டியது.

அறிவிப்பாளர் பெயர் கேட்டார்.

லக்ஷா என்றது.

லட்சணமாத்தான் இருக்கே

அதாவது ரொம்ப அழகாத்தான் இருக்கே!

"எழிலி"என்று அழைக்கலாமா?

என்றார் தமிழ் ஆர்வம் பொங்க!

கேட்ட உடனே

பெற்றொர் பக்கம் இருந்து

கூச்சல்.

கூக்குரல்.

தமிழ்ப்பெற்றோர்கள் தான்.

ஆனாலும்

தோலெல்லாம் அரிப்பு எடுத்தாற்போல்.

"வேண்டாம் அந்தப்பெயர்."

"பிரண்ட்ஸ் களுக்கு புரியாது!"

"அதென்ன எழிழி எலி என்று?"

"நாளைக்கு வரும் மாப்பிள்ளைக்கும்

பெயர் பிடிக்காமல் போய்விடலாம்"

"நாங்களும் விடிய விடிய‌

கூகிளில் தேடித் தான்

இந்தப்பெயரை

வைத்திருக்கிறோம்.."


இப்பொழுது புரிகிறதா?

தமிழ்ப்பகைவர்கள்

யார் என்று.


___________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக