வியாழன், 22 ஜூலை, 2021

மூடு

 மூடு

=================================ருத்ரா


விடியல் பற்றி 

விடிய விடிய பேசினார்கள்.

"விடிய மறுத்தால் என்ன

சிசேரியன் செய்து விடலாம்"

என்று ஒரு கவிஞன்

புதுக்கவிதை சொன்னான்.

விடவில்லை அவன்

வரிகளில் வெளுத்து வாங்கினான்.

"ஓ மனிதா!

நீ காது குடைவதே

இந்த மின்னல் குச்சிகளில் தானே!

தொடு இந்த தொடுவானத்தை

உன் பேனாவினால்

உன் காலில் விழும் அது"

"வாவ்" "வாவ் "

என்றார்கள்.

அப்புறம்

ஒரு வழியாய் தூங்கினார்கள்.

காலைச்சூரியன்

சுள்ளென்று

சன்னல் வழியே

வரிப்புலியாய்

கம்பி நிழல்களை

சூடு போட்டு எழுப்பினான்.


"யாரப்பா சன்னலை திறந்தது?

மூடு

அதற்குள்ளா விடிஞ்சு போச்சு?

தூக்கம் கலஞ்சு போச்சே"


முனகியது புதுக்கவிஞன் தான்.


___________________________________

21.10.2014


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக