புதன், 19 ஆகஸ்ட், 2020

குறும்பாக்கள் (ஏடு...3)

 


குறும்பாக்கள் (ஏடு...3)

___________________________________ருத்ரா



அந்த "பிரம்மம்" வேதாந்தத் துப்பாக்கியால்

பதிமூன்று தமிழர்களை சுட்டுத்தள்ளின.

ஸ்டெர்லைட்.

___________________________________ருத்ரா


வாசலில் நிறுத்தியிருந்த காருக்கு

சருகுகளால் தினமும் அபிஷேகம்.


இலையுதிர் காலம்

__________________________ருத்ரா


தமிழ்நாட்டைக் கூறு போட

அவர்கள் கசாப்புகத்தியை

இவர்கள் தீட்டுகிறார்கள்.


2வது தலை(வலி)ந‌கரம்.

_______________________ருத்ரா


சேர சோழ பாண்டியர்கள் வேண்டாம்.

இந்த குறுநில மன்னர்களே போதும்

தமிழன் வரலாற்றுக்கு.


2ஆவது தலைநகரம்

___________________________ருத்ரா.


தலையில் அடித்துக்கொண்டது

கொரோனா.

தலைநகர அரசியல்

_________________________ருத்ரா


நிறுத்து உன் பேனாவை.

பட்டாக்கத்தியை இந்த 

பட்டாம்பூச்சிகளின் மீதா எறிவது?


கவிதை

__________________________ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக