ஞாயிறு, 25 ஜூன், 2023

மருதையன் என்கிற மகத்தான சிந்தனையாளர்.

மருதையன் என்கிற மகத்தான சிந்தனையாளர்.

_________________________________________________

சொற்கீரன்.



விண்குழல் பேச்சுகள்

ஏதோ பிருந்தாவன புல்லாங்குழல் 

கீற்றின் ஒலிகள் என்பதற்கில்லை.

அதற்குள்ளும்

அக்கினி மூலை ஆகாத மூலை 

எல்லாம் உண்டு.

ஆனால் மனித சிந்தனை என்பது

உறைந்து விறைத்து சவமாகும்

பிணக்கிடங்காக‌

மலிந்து கிடக்கும் வேளையில்

நம் வரலாறுகள் வெறும் சவத்துக்குப்பைகளாய்

இருக்கும் நிலையில் இருந்து

சிந்தனையின் அக்கினிப்பறவைகள்

உயிர்த்து தன் ராட்சசசிறகுகளை

சடசடத்துக்கொண்டு பறக்கின்ற‌

அற்புதங்களை தன் சொற்பெருக்குகள்

மூலம் 

அள்ளி அள்ளித்தருகின்ற 

அரசியல் மேதை

திரு மருதையன் அவர்கள்.

உட்கார்ந்து உற்றுக்கேட்டால்

இந்த நாட்டின் மண்ணாங்கட்டிகளுக்கு கூட‌

நரம்புகள் புடைக்கும்.

மூளைசெதில்கள் மூண்டெழுந்து விடும்.

சோறு என்பது

ஒரு அவசியத்தின் அடையாளச்சின்னம் தான்.

ஆனால்

அது இன்னும் நம் நூற்றாண்டுகளையெல்லாம்

அடுப்பில் ஏற்றி 

உலை கொதிக்கவைக்கிற‌

உந்துதலின் அறிவுப்பரல்

என்பதில் ஐயம் இல்லை.

அவர் பேச்சுகள் மரத்துக்கிடக்கின்ற‌

இந்த பூமத்தியரேகைகளையும்

அட்சய தீர்க்க ரேகைகளையும்

நமக்கு நாம் பாடம் புகட்டும்

சவுக்கடிகளாய் மாற்றி 

எழுச்சி கொள்ளச்செய்யும்.

அறிவும் சிந்தனையும் கூட‌

இப்படி ஒரு ஆற்றல் நிறைந்த‌

குவாண்டம் மெக்கானிக்ஸ் ஆக்கி

புதிய பிரபஞ்சத்தை வார்த்துவிடும்

என்பதற்கு இவர் பேட்டிகளே

மெய்யான சான்றுகள்.


____________________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக