புதன், 7 ஜூன், 2023

புல்லுக்கும் புழுவுக்கும்

 


புல்லுக்கும் புழுவுக்கும் கூட‌

கவிதை எழுதத்தெரியும்.

வானமே தான் அவற்றின்

காகிதமும் எழுத்தும்.

அவை

சூரியனைக்கொப்புளித்து

சொற்களில் பல் தேய்த்து

விடியலை வரவேற்றன.

அவற்றின் மூச்சுகள் தோறும்

விடுதலையின் அணுவுலைக்கூடம்.

அவற்றின் பட்டாம்பூச்சிகளில்

வர்ணங்கள் மட்டுமே இருந்தன‌

வர்ணாசிரமங்கள் இருந்த தில்லை.

கடவுள் எனும் ஆபாசத்தை

அவை இன்னும் 

அறியவே இல்லை.


_________________________________சேயோன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக