புதன், 7 ஜூன், 2023

அகழ்நானூறு 45'

 





அகழ்நானூறு 45

___________________________________சொற்கீரன்


உருவத்து வெரீஇய சுரனிடை ஒரு கல் 

குதிரை போன்ம் சூர் படு ஆரிடை

நவிரல் வான்பூ அவன் நசை நளி ஊர‌

அவள் இறைவழி ஊரும் வளை அலங்கு

எல்லின் வழங்கலும் வௌவலும் 

அவன் மழவத்திரள் சிதைப்ப 

ஆரிடை அலைவுறு கூர் வள்ளுகிர்

பெண்ணை போர்த்த குரூஉமயிர் யாக்கை

எண்கின் எதிரலும் அஞ்சாத்தகையன்

பாம்புரி வீட பரல் நெரி ஆற்றின்

பொரிய இடறி கால்பெரிது கடுக்கும்

நோதலும் பெரிதென எண்ணா மாண்பின்

வரூஉம் வரூஉம் வீ அலரி இறைய 

நெடுவழி பரத்த அவளின் மைவிழி

சிவணிய நெஞ்சில் தன் நெஞ்சு ஒற்றி

விரைவான் கல்படு அத்தம் நீங்கி

உள்ளத்துள் அவள் நுதல் வாளின் ஈர்தல்

நுடங்கியும் செல்வான் ஒல்லாமை ஆற்றி.


______________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக