சனி, 29 ஜூலை, 2017

தெருவெல்லாம் ஜி.எஸ்.டி


தெருவெல்லாம் ஜி.எஸ்.டி
_____________________________‍‍‍‍‍__________________ருத்ரா

அந்த தெருவில்
ஒருவர் நடந்து கொண்டிருந்தார்.
திடீரென்று
மூணு சிங்க முத்திரை பதித்த
ஜீப் ஒன்று
அவரை வழி மறித்தது.
சி.ஜி.எஸ்.டி
எஸ்.ஜி.எஸ்.டி
எல்லாம் சேர்த்து
25 ரூபாய் கட்டவேண்டும் நீங்கள்
என்றனர்
ஜீப் அதிகாரிகள்..

"எதற்கு சார்?.." என்றார்
அந்த பாதசாரி.

"உங்கள் பேர் தானே
"தக்காளி" ராமசாமி?"

"ஆம்"..

"அந்த தக்காளிக்குத்தான் ஜி.எஸ்.டி."

"அது நான் ஏதோ ஒரு நாடகத்தில்
நடித்ததற்கு கொடுத்த பட்டம்  சார்"

"அப்படியானால் இவரிடம்
கேளிக்கை வரியாக‌
இன்னும் ஒரு செட் ஜி.எஸ்.டி
கலெக்ட் பண்ணுங்கள்"

பாதசாரி மயக்கமடைந்து விழுந்தார்.

____________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக