ஞாயிறு, 2 ஜூலை, 2017

இதோ ஒரு வாமனாவதாரம்.

இதோ ஒரு வாமனாவதாரம்.
=============================================ருத்ரா

கையில் தாழங்குடையில்லை.
முன் குடுமியோ பின் குடுமியோ இல்லை.
மேலும்
ஒழுங்காய் ஆளும் அரசன் தலையில்
ஏறி மிதித்து
அவனை பூமிக்குள் அழுத்தும்
சாணக்கியத்தனம் ஏதும் இல்லை.

பாருங்கள்
மத்திய பிரதேசத்தில் ....
இவர் பெயர் பெஸோரி லால்
அம்பது வயது ஆகியும் உயரம் 29 அங்குலமே !
அவரை தன் குழந்தை போல்
தன் இடுப்பில் ஏந்தி
மத்தாப்பூ சிரிப்பை சிந்தும்
பெறாத அந்த தாயின் அன்பு
கோடி மேல் கோடி பெறும் .
அம்பது வயது குழந்தையின்
அந்த புன்னகையில் கூட
ஆயிரம் காந்திப் புன்னகைகள்
சுடர் பூக்கின்றன!

பாருங்கள் இந்த அற்புத காணொளியை!

http://www.msn.com/en-in/video/viral/aged-50-and-only-29-inches-tall-born-different/vi-BBDyu5L?ocid=spartanntp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக