ஞாயிறு, 2 ஜூலை, 2017

ஆழ்ந்த இரங்கல்கள்

தோழர் சௌந்தர் மறைவு
எனக்கு
என் இருப்பிடத்தைச்சுற்றிய‌
ஒரு பூகம்ப அதிர்ச்சி.
என் ஒவ்வொரு எழுத்துக்குள்ளும்
அவரது சிற்றுளி ஒலித்திருக்கும்.
என் அருகே நடைபயின்று வரும்
"ஞான பீடம்" அவர்.
அவர் பாராட்டு சுகத்தை
எதனோடு ஒப்பிடுவது?
அந்த "தாஸ் கேபிடல்" பக்கங்களின்
சர சரப்பு ஒலிக்கீற்றுகளில்
ஒரு விடியல் பூச்சு
என் சூரியனை எனக்கு காட்டிநிற்குமே
அதைத்தான் சொல்லவேண்டும்.
ஆழங்காண இயலா
என் ஆழ்ந்த இரங்கல்கள் அவருக்கு!

====================================செங்கீரன்
02 ஜுலை  2017


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக