சனி, 1 ஜூலை, 2017

கண்ணாடித்தொட்டி மீன்கள்

கண்ணாடித்தொட்டி மீன்கள்
========================================ருத்ரா இ.பரமசிவன்
(தலைப்பு:உபயம்:"ஞானக்கூத்தன்)

நல்லவேளை
பௌராணிகர்களின்
சப்பளாக்கட்டையிலிருந்து
நான் தப்பித்தேன்.
இல்லாவிட்டால்
இந்த "அழுகிய நான்கு வர்ணத்தை"
சிருஷ்டித்த அந்த
சுவடிகளைக் காத்ததற்கு
நானும் அல்லவா
பொறுப்பு ஏற்க வேண்டும்!
அந்த "சோமுகாசுரனை"க்கொன்றதால்
இந்த கண்ணாடித்தொட்டியெல்லாம்
ரத்தத்தொட்டி அல்லவா ஆகியிருக்கும்.


========================================



தண்ணீர்த்தொட்டி மீன்கள்
~ ஞானக்கூத்தன்

இந்தக் கடலின்
எந்தக் குபேர மூலையிலும்
கிடைக்காத புழுக்கள்
வேளை தவறாமல்
தானாய் வருகிறது.

தெய்வக் கிருபையால்
புயல்களும் இல்லை.
திமிங்கிலங்களை
அவதாரக் கடவுள்
காணாமல் செய்துவிட்டார்.

ஆனால் இன்னும்
ஒன்று மட்டும்
புரியாத புதிராய் இருக்கிறது.

உலகத்தை உதடு குவியப் புணர்கையில்
அஃதென்ன இடையில்?
அப்புறம் ஒன்று
எங்கே எங்கள்
முள்ளுச் சூரியன்களும் கள்ளுப் பிறைகளும்?





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக