திங்கள், 2 மார்ச், 2020

எங்கோ.....?




எங்கோ.....?
--------------------------------------------------------------ருத்ரா


பாருங்கள்
மதம் என்பதே
சமூக விரோதம்
ஆகிப்போனது.
மானுடத்தை தின்னும் கடவுள்
மனிதனுக்கு அருள் செய்யும்
என்ற‌
மகத்தான பொய்மையின்
இந்த அரக்கு மாளிகையில்
நம்
மகா "பாரதத்தின்"
சாம்பல் மேடு தான்
மிச்சமாய் இருக்குமோ?
சீற்றமாய்
ஒரு பெருமூச்சு மூடவா
தோன்றாது?
விடியலின் கீற்றுகள் மட்டும்
எங்கோ
தொலை தூரத்தில்!

__________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக