சனி, 29 பிப்ரவரி, 2020

"தமிழ்"

"தமிழ்"
=========================================ருத்ரா

என்ன உற்றுப்பார்க்கிறாய்?
இது என்ன ஒலி
என்று வியக்கிறாயா?
உன் காயலாங்கடை
சமாச்சாரங்களிலிருந்து
விலகியிருக்கிறதே
என்று முழிக்கிறாயா?
உன் வேர்வை
உன் ரத்தம்
உன் சத்தம்
என்றோ
பல்லாயிரம்  ஆண்டுகளுக்கு முன்
கல்லுக்குள்ளும்
மண்ணுக்குள்ளும்
நசுங்கிக்கிடந்து
இன்று உன் உயிருக்குள்
ஒரு மின்னல் பாய்ச்சுகிறது
என உணர்கின்றாயா?
உன் ஓர்மை விளிம்பில்
எட்டுத்தொகையும்
பத்துப்பாட்டும்
வண்ணம் காட்டும்
பளிங்கு வெள்ளத்தின்
பஃ றுளியாறுகள்
பாய்ந்தோடுகின்றனவா....?
...............................
...................................
ஸ்டாப் ஸ்டாப்  மச்சி..
சினிமா பாஷையிலே சொல்லு.
சூப்பர் ஸ்டாரண்டை
இடுப்பு நெளிச்சுக்கிணு
குத்தாட்டம் போட்டுச்சே
அந்தப்படத்துலே
அந்தப்பொண்ணா?
அது பேரு வாய்ல நொழையலே...
இதும் பேரும்
(அதாவது "தமிழ்")
பல்லு  ஒடையுது ..நைனா...
........
அவன் சொல்லிக்கொண்டே போனான்.
இடை மறித்தேன்.

"அல்வா"...
இந்தப்பேரு
எப்படி இருக்கு?
கடுப்படித்தேன் அவனை.
அதுக்கென்ன மச்சி..
ஷோக்கா இனிப்பா
அப்டியே
முழுங்கிடலாமே "அண்ணாத்தெ"


======================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக