ஞாயிறு, 29 மார்ச், 2020

அஞ்சி அஞ்சி சாவார்

அஞ்சி அஞ்சி சாவார்
==================================ருத்ரா

அவனின்றி ஓரணுவும் அசையாது
என்று சொல்லிவிட்டு
கொரோனாவுக்கு மட்டும்
இப்போது மனிதன் மீது
பழி போடுவது என்ன நியாயம்?
வைரஸ் என்றால்
உயிரற்ற பிண்டம் என்றும்
அதற்குள்ளும் 
இருப்பது குவாண்டம் எனும்
ப்ரோபபலிடி என்றும்
அதில்
உயிர் இருக்கும் ஆனால் இருக்காது
என்றும்
ஆராய்ச்சிக்கட்டுரைகளை
அடுக்கிக்கொண்டிருக்கிறான்
விஞ்ஞான மனிதன்.
லட்சக்கணக்கில் சாவு
எனும் மரண மழை தான்
மனிதனை 
அஞ்சி அஞ்சி சாகச்செய்து
கடவுள் பக்கம் தள்ளிவிடுகிறது.
பாவம் 
என் செய்வது?
மரணத்தீட்டு எனும்
மடி வந்து தாக்காமல் இருக்க‌
கடவுளுக்கும் கூட இங்கே
ஊரடங்கு தான்.
கனத்த இருட்டுகளின் பூட்டுகளுக்கிடையே
இந்த யாகமும் பூஜையும்
என்ன சாவி வைத்திருக்கிறது
நம் இருட்டை திறந்துபார்க்க?
விஞ்ஞானம் தன் விரலில்
இரு சாவிகளை சுழற்றிக்கொண்டிருக்கிறது.
ஆம்.
அவை 
"டார்க் மேட்டரும் டார்க் எனர்ஜியும்"

========================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக